(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)
வா மழையே ..!
நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …
இணைய இதழ்
(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)
வா மழையே ..!
நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …
கைவிரல்கள் வேகமாக பூக்களைத் தொடுத்துக் கொண்டிருக்க, அதைவிட வேகமாக வார்த்தைகளை விடுத்துக் கொண்டிருந்தாள் வடிவு தன் கணவனிடம்.
“பொண்ணை பார்த்தோமா? பேசினோமோன்னு இல்லாம, தனியா மணிக்கணக்குல போய் பேசறதுக்கு என்னதான் இருக்குமோ தெரியல? இந்த மாதிரி அநியாயத்தை நான் பார்ததேயில்ல”
எதிரே ஊஞ்சலில் அமர்ந்திருந்த மயில்சாமி, மனைவியை கடிந்தார்.
Continue reading “தனிக்குடித்தனம் – மஞ்சுளா ரமேஷ்”2ஏ பூந்தோட்டம் செல்லும் டவுன் பஸ் வந்து நின்றது.
பஸ்ஸின் பின்புறம் வழியாக மீன் கூடைகள் எல்லாம் இறக்கியபின் பூபதியும் கீழே இறங்க, பாபு தன் லோடு சைக்கிளை அருகே கொண்டு வந்தான்.
மீன் கூடையை ஏற்றி வைத்து சைக்கிளை பாபு தள்ள, பூபதி கூடையைப் பிடித்துக் கொண்டதும் இருவரும் நடந்தனர்.
கடைத்தெருவில் தூங்குமூஞ்சி மரத்தடி வந்ததும் பூபதி மீன் கூடையை இறக்கி வைத்த போது ஊரிலிருந்த பெரியவீட்டுப் பெண்கள் சுற்றி வளைத்தனர்.
பாபு சைக்கிளை ஸ்டாண்ட் செய்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
Continue reading “நினைவுகள் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”போராடும் துணிவிருந்தால்
போர்க்களமும் வெறும் களம் தான்!
புத்தி தீட்டாத மனிதனில்
வெறும் நிகழ்வும் போர்க்களம் தான்!
மரங்களுடன் அளவளாவி
சில பல
கவிதைகள் அரும்பிக்
கூடி மகிழ்ந்து
புலர்ந்து மலர்ந்த
அந்தியோடு ஆயிரம்
பொழுதுகள் போயின!