யார் வருவா மீட்டெடுக்க?

கூர்மையான மூக்கு வச்சு…

கூட இரண்டு இறக்கை வச்சு…

கூட்டமாக கூடி நின்று…

கோகோ என்ற சத்தத்துடன்…

நாங்க விட்ட ராக்கெட்டு…

Continue reading “யார் வருவா மீட்டெடுக்க?”

அந்த புத்தகம் – சிறுகதை

நீதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.

அந்த கைதியின் வழக்கு இருபது வருடமாய் இழுபறியில் இருக்கின்றது. இப்போது தான் தீர்ப்பு வருகிறது.

அவன் கைது செய்யப்பட்ட போது மொத்த ஊடகமும் பத்திரிக்கையும் அந்த வழக்கை விசாரித்து அவரவர் தீர்ப்புகளை வழங்கி விட்டன.

ஆனால் என்ன செய்வது அரசாங்கம் சொல்லும் தீர்ப்பே இறுதியான முடிவு, அதனால் மக்களும் ஊடகங்களும் எடுத்த முடிவு கடலில் கரைத்த உப்பானது.

Continue reading “அந்த புத்தகம் – சிறுகதை”

ரணங்களின் நிறங்கள் – சிறுகதை

பிரபல எழுத்தாளர் வைதேகி தன் வீட்டின் ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி நிகழ்ச்சியில் ஆர்வமுடன் லயித்திருந்தாள்.

டிவி தொகுப்பாளர் அடுத்து வரும் நிகழ்ச்சியை ஸ்டைலான உச்சரிப்பில் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடுத்து நாம் பார்க்க உள்ள நிகழ்ச்சி பிரபலங்களின் மாமியார்களுடன் ஒரு நேர்காணல்.

Continue reading “ரணங்களின் நிறங்கள் – சிறுகதை”

இன்னும் விளங்க வில்லங்க – கிராமியப் பாடல்

தமிழ்ப் பெண்

ஏ மச்சான் எனக்கு மட்டும் இப்படி நடக்குது
நான் என்ன பாவம் செஞ்சு புட்டேன் நெஞ்சம் வதைக்குது
பூ வச்சேன் புழுதி மண்ணில் விழுந்து போச்சுது
சாந்து பொட்டும் கூட சடுதியிலே கரையலாச்சுது

Continue reading “இன்னும் விளங்க வில்லங்க – கிராமியப் பாடல்”

கானல் நீர்- சிறுகதை

நிரவியில் ஒரு செல்வந்தர் வீட்டில் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டு தடபுடலாக திருமணம் நடந்து கொண்டிருந்தது.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்தது.

அந்த ஊரில் பெரிய பெயர் போன சமையல்காரர் மெய்தீன் கைப்பக்குவதில் சமையல் தயாரிக்கப்பட்டு பந்திப் பரிமாறப்பட்டது.

Continue reading “கானல் நீர்- சிறுகதை”