பல வண்ண மலர்களைத் தொடுத்துக் கட்டும் மாலையைச் சரம் என்று கூறுவர். கண்களுக்கு விருந்தையும், நுகர்வதற்குப் பலவித மனத்தையும் தருவது ’சரம்’ ஆகும்.
மலரைச் சுற்றும் வண்டுகளும் தேனீக்களும் ரீங்காரமிடும். அது காதுகளுக்கு ஓசையோடு இனிமை தரும். மலர் ஸ்பரிசத்தில் சுகமானது. ஆக, நம் புலன்களில் நான்கினுக்கும் சரம் தீனி போடுகிறது.
தமிழ்மொழி இணையதளங்கள், இன்று தமிழ்மொழியை வளர்க்கும் காரணிகளில் ஒன்றாகும். அவை காலத்தின் அதீத வளர்ச்சியால் விளைந்தவை.