ஒரு மருத்துவ ஊழியனின் கதை என்ற வகையில் உமர் பாரூக் அவர்கள் எழுதிய ஆதுர சாலை என்னும் நூல், மருத்துவத் துறையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூலாக நான் கருதுகிறேன்.
(ஆதுர சாலை என்றால் மருத்துவமனை என்று பொருள்)
அலோபதி மருத்துவ ஆய்வுக் கூடங்களில் நடக்கும் டெஸ்டிங் மோசடி தில்லுமுல்லுகளையும், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் பேசும் நாவல் ஆதுர சாலை.
கதையின் ஆரம்பத்திலேயே ‘இந்த நாவல் யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளவும்’ என ஆசிரியர் அறிவிக்கிறார்.