நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் என்ற‌ நூல் திரு.சி. இராமமூர்த்தி இராமாநுஜதாசன் அவர்களால் மே மாதம்-2021 ல் வெளியிடப்பட்ட அற்புதமான நூல் ஆகும்.

அற்புதமான ஆழ்வாரான நம்மாழ்வாரின் இலக்கிய நயங்களையும், வைணவச் சமயம் சார்ந்த இறையாண்மைக் கருத்துக்களையும் பன்னூல் புலமையோடு ஒப்பிட்டும், உவமித்தும் எழுதப்பட்டது இந்நூல்.

ஆன்மீகம் ஒரு மாபெரும் பிரமாண்டம். அதை இன்னும் யாரும் முழுதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் நுழைவதற்கான பல வழிகளில் இந்த நூலும் ஒன்று எனலாம்.

Continue reading “நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை”

பரதேசம் – சிறுகதை

பரதேசம்
பரதேசம் போவதுதான் ஒரே வழியென்றால் செய்து விட வேண்டியதுதான். ஒரு சில நாட்களாக அதே சிந்தனை. 

மாடுகள், உழவு நிலம், கிணறு, மனைவி, மகன், கண்ணுக்குட்டி, அந்த ஒற்றை பனை மரம், 12-ம் நம்பர் பஸ், கருப்பன் நாய், பால்காரம்மா, அய்யனார் எல்லாமே அவ்வபோது நினைவுக்கு வந்தது.

முக்கியமாக மகன், பதினெட்டு வயது. அவன்தான் சொன்னான்.

“எங்கேயாவது போயிரு..”

“சம்பத்து, உம் பேச்சே சரியில்லை.. “

Continue reading “பரதேசம் – சிறுகதை”

பூங்கொடிக்கு பொன்கவிதை

கருவறையில் சுமந்தவளே
எனைக் காப்பாற்றும் உமையவளே
உடம்புக்குள் என்னை வைத்து
உயிரோடு சேர்த்தணைத்து

உதிரத்தை பாலாக்கி
எனை உலகறிய தந்தவளே
தூக்கத்தை நீ தொலைத்து
துணிவுடனே இருந்திங்கே
எனைத் தோரணையாய் வளர்த்தவளே

Continue reading “பூங்கொடிக்கு பொன்கவிதை”