அரிவாட்டாய நாயனார்

அரிவாட்டாய நாயனார்

அரிவாட்டாய நாயனார் சிவவழிபாட்டுக்குரிய பொருட்களை தவறி கீழே விட்டதால், சிவவழிபாடு தடைபட்டதாகக் கருதி அரிவாளால் தன்னுடைய கண்டத்தை அறுத்த வேளாளர்.

அரிவாட்டாய நாயானார் சோழ நாட்டில் இருந்த கணமங்கலம் என்னும் ஊரில் வேளாளராக வாழ்ந்தவர். இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத அன்பு கொண்டிருந்தனர்.

Continue reading “அரிவாட்டாய நாயனார்”

நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்

படிக நீர்

மதிய நேரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ‘மோர் குடித்தால் இதமாக இருக்கும்’ என்று மனதில் தோன்றியது.

சமையலறைக்குச் சென்றேன்.

சமையலறை மேடையிலிருந்த ஒரு கிண்ணத்தில் தயிர் இருந்தது. ‘மோர் குடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் இன்னும் மேலெழுந்தது.

உடனே, கலவைக்கருவி (மிக்சி) ஜாடியை எடுத்து அதில் தயிரை இட்டு, அத்தோடு சிறிதளவு நீரை சேர்த்து கலவைக்கருவியில் வைத்து இயக்கினேன். சில நொடிகளில் மோர் தயார் ஆனது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்”

ஒரு வழிப் பாதை – சிறுகதை

ஒரு வழிப் பாதை

அன்று காலை ஊழியர் ஒருவரின் பென்ஷன் சம்பந்தப்பட்ட விவரம் ஒன்றைப் பெறுவதற்காக அக்கவுண்ட்ஸ் பிரிவிற்குச் சென்றான் தெய்வசிகாமணி.

அச்சமயம் வழக்கமான புன்முறுவலுடன் தன்னிடம் பர்சனலாகப் பேசவேண்டும் எனக் காஷியர் லோகநாயகி சொன்னபோது, அது தன் திருமணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் எனக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை அவன்.

அலுவலகக் கேண்டீனில் காலை பதினொன்றரை மணியளவில் ஒதுக்குப்புறமாய் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது லோகநாயகி வந்து விஷயத்தைக் கூறினாள்.

Continue reading “ஒரு வழிப் பாதை – சிறுகதை”