பழி தீர்ப்பு – சிறுகதை

ஆற்காடு சாலையின் வழியே குன்றத்தூரிலிருந்து வடபழனி வரை செல்லும் M88 பேருந்து பாய்க்கடை பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. ஸ்ருதி அதே பேருந்தில் கடைசி சீட்டில் அமர்ந்து யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

வடபழனி செல்வதற்காக முன் படிக்கட்டுகளின் வழியே ஏறிய சுரேஷின் பார்வையில் காலி இருக்கை ஒன்று தென்பட இருக்கை கிடைத்த சந்தோஷத்தில் பயணச்சீட்டை வாங்காமலே வேகமாக சென்று இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.

அந்த தடத்தில் ஓடும் பேருந்துகளில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும். மாறாக அன்று அந்த பேருந்தில் நெரிசல் அதிகம் இல்லாதிருந்தது.

சென்னை நகரப் பேருந்துகளின் நடத்துனர்கள் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

Continue reading “பழி தீர்ப்பு – சிறுகதை”

யாருக்காகவும் எதற்காகவும் – சிறுகதை

யாருக்காகவும் எதற்காகவும்

அவன் பேரு சுப்பையா. ஊரில் அவனை ‘தொப்பையன்’ என்றுதான் அழைப்பார்கள். ஊரில் யார் மனதும் புண்படு்ம்படி அவன் பேசியது கிடையாது.

பேசியது கிடையாது என்பதைவிட பேச தெரியாது என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். கள்ளம், கபடம், சூது, வாது என்று எந்த எண்ணமும் இல்லாதவன். வெகுளி. அன்பு என்ற வார்த்தையின் அடையாளம்.

குழந்தைகள் என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். அடுத்தவர் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாய் நினைப்பதாலோ என்னவோ அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

Continue reading “யாருக்காகவும் எதற்காகவும் – சிறுகதை”

சுயசேவையா… சே… சே… – சிறுகதை

சுயசேவையா... சே... சே... - சிறுகதை

மாலை அலுவலகம் முடிந்து மறுநாளைக்குத் தேவையான காய்கறிகளை ஒவ்வொன்றாய் பார்த்து வாங்கி பையில் நிரப்பிக் கொண்டு, ரொம்பவும் களைப்புற்றவனாய் தளர்ந்த நடையுடன் ‘அண்ணா நகர்’ பஸ்ஸைப் பிடிக்க வந்து கொண்டிருந்தபோது, வழி நெடுக பல ஹோட்டல்கள் கண்ணில் பட, விலைப்பட்டியலோ பயமுறுத்த, உள்ளே நுழையத் தயங்கினான் சேகர்.

தெப்பக்குளம் எதிரிலிருந்த சிந்தாமணி கேண்டீனைக் கண்டதும் மனதில் ‘குபுக்’கென மகிழ்ச்சி பொங்கியது அவனுக்கு.

Continue reading “சுயசேவையா… சே… சே… – சிறுகதை”

தனிக்குடித்தனம் – சிறுகதை

தனிக்குடித்தனம் - சிறுகதை

தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என இரண்டு மாதங்களாகவே வித்யா, பாலனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவளது இந்த எண்ணத்தை மாற்ற பாலன் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை.

அப்பாவையும் அம்மாவையும் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக விட்டுச் செல்ல பாலனுக்கு இஷ்டமில்லை.

‘இவளுக்கு என்ன குறைச்சல் இங்கே? அம்மா வித்யாவை உள்ளங்கையில் வைத்துத்தான் தாங்குகிறாள். வித்யா வேலைக்குச் செல்வதைப் பற்றியும் இருவரும் எதுவும் சொல்லவில்லை.

Continue reading “தனிக்குடித்தனம் – சிறுகதை”

அழகான தீர்வு – சிறுகதை

அழகான தீர்வு - சிறுகதை

அன்று தொலைக்காட்சியில் கண்ட செய்தி மாணிக்கத்திற்கு பேரதிர்ச்சியைத் தந்தது. பள்ளியில் படிக்கின்ற மாணவிக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை என்ற செய்திதான் அது.

அவரின் ஒரே மகள் மதியழகி பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்றாள். மனம் கலங்கியது மாணிக்கத்திற்கு.

“அப்பா நான் பள்ளிக்கூடம் போய்ட்டு வரேன்ப்பா” என்று துள்ளித் துள்ளி மகிழ்ச்சியாக சென்றாள் மதியழகி.

அன்றைய தினம் அம்மாவட்ட காவல்துறை பெண் அதிகாரி வருகை புரிந்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் பற்றி விரிவாக விளக்கினார்.

Continue reading “அழகான தீர்வு – சிறுகதை”