சென்னை சென்று மகள் காவேரி வீட்டில் ஒரு வாரம் தங்கி விட்டு திருச்சி திரும்பி நான்கு நாட்கள் ஆகியும், அம்மா மகேஸ்வரியின் மனம் ஒருவித தத்தளிப்பிலேயே மூழ்கியிருந்தது.
இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டுப் போகும்படி காவேரி எவ்வளவோ வற்புறுத்தியும், கௌரவம் குறுக்கே நின்று தடுத்ததால் கிளம்பி வந்துவிட்டாள்.
என்னதான் பெற்ற மகள் வீடு என்றாலும், மாப்பிள்ளை வீட்டில் எவ்வளவு நாட்கள் தங்குவது?
மாப்பிள்ளை மறுப்பு ஏதும் கூறப் போவதில்லை. இருப்பினும் ஒருவித தர்மசங்கடம் உள்ளத்தை உறுத்தியதால், மகளின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை.
Continue reading “பிறைகள் – சிறுகதை”