வாயு – வளியின் குரல் 1

வாயு - வளியின் குரல்

“அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நலம் தானே? நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் பேச விழைகிறேன்.

‘பேசுற‌து யாரு?’ என நீங்கள் திகைக்கிறீர்களா?

குழப்பமோ, திகைப்போ வேண்டாம். நான் தான் வாயு. ஆங்கிலத்தில் ′gas′ என அழைப்பீர்களே, அதுவே தான். எனக்கு ′வளிமம்′ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

கடந்த சில நாட்களாகவே, நான் உங்களிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்கு காரணங்கள் பல இருக்கின்றன.

சரி, நான் கூறப்போவதை கேட்பீர்களா?

Continue reading “வாயு – வளியின் குரல் 1”

குடிநீர்- நீருடன் ஓர் உரையாடல் 50

குடிநீர்

மதியம் 12.40 மணி. வெயில் உக்கிரத்தில் இருந்தது.

பேருந்திலிருந்து இறங்கியபோதே எனக்கு தாக உணர்வு மேலெழுந்தது. முன்னதாக நான் எடுத்துச் சென்றிருந்த நீரும் பேருத்தில் வரும்போதே குடித்து காலியாக்கி விட்டேன்.

தாகம் எடுத்ததால், ′பழரசம் குடிக்கலாமா அல்லது புட்டி நீர் வாங்கி அருந்தலாமா′ என எண்ணினேன். ′சரி வீட்டிற்கு சென்று நீர் அருந்தலாம்′ என்று முடிவெடுத்து நடக்கத் தொடங்கினேன்.

Continue reading “குடிநீர்- நீருடன் ஓர் உரையாடல் 50”

கழிவு நீர் – நீருடன் ஓர் உரையாடல் 49

கழிவு நீர்

அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. சட்டென எழுந்தேன். சுவர் கடிகாரம் மணி 5.10 எனக் காட்டியது.

′காலைல யாரா இருக்கும்?!′ என்று எண்ணியபடியே விரைவாக சென்று அலைப்பேசியை பார்த்தேன்.

எண்கள் தான் தெரிந்தன. யாரென தெரியவில்லை. அலைபேசி அழைப்பை ஏற்றேன்.

″சார், கழிவு நீர் வண்டி வருது″ எனக் கூறி வீட்டிற்கு வருவதற்கான வழியைக் கேட்டார் அந்த நபர். நானும் வழி சொன்னேன்.

Continue reading “கழிவு நீர் – நீருடன் ஓர் உரையாடல் 49”

உலக நீர் நாள் – நீருடன் ஓர் உரையாடல் 48

உலக நீர் நாள் - நீருடன் ஓர் உரையாடல் 48

ஜீன் 05. உலகச் சுற்றுச்சூழல் நாள். அன்று காலையில் இருந்தே எனக்கு பல்வேறு நிகழச்சிகள் இருந்தன.

முதலில் நீர் மாசுபாட்டிற்கு தீர்வு காண்பது தொடர்பான ஒரு ஆய்வரங்கத்தில் கலந்துக் கொண்டேன்.

அதன் பின்னர், காணொலி வாயிலாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ′புதிப்பிக்க கூடிய ஆற்றல் வளங்கள்′ பற்றிய உரை நிகழ்த்தினேன்.

அடுத்து மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி இருந்தது. அதுவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்தது தான்.

Continue reading “உலக நீர் நாள் – நீருடன் ஓர் உரையாடல் 48”

நீர் தத்துவம் – நீருடன் ஓர் உரையாடல் − 47

நீர் தத்துவம் - நீருடன் ஓர் உரையாடல் − 47

சில அடிப்படை வேதியியல் கருதுகோள்கள், விதிகள், மற்றும் தத்துவங்கள் ஆகியனவற்றை நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் படித்து நினைவூட்டிக் கொண்டிருந்தேன்.

தாகம் எடுத்தது. நீர் பருகினேன்.

″போதுமா சார்?″ – நீர் கேட்டது.

″நீர் தானே?″

″ஆமாங்க…″

Continue reading “நீர் தத்துவம் – நீருடன் ஓர் உரையாடல் − 47”