குடும்பம் ஒரு கதம்பம் – கதை

“பிள்ளை இல்லாதவன் வீட்டில் கிழவன் துள்ளி குதித்து ஆட்டம் போட்டானாம் அப்படி இருக்கு உங்களுடைய கூத்து”

“ஏன் நான் என்ன செஞ்சுப்புட்டேன் இப்போ? எப்பவும் போல தான் இருக்கேன். வழக்கத்துக்கு மீறி கொஞ்சம் அதிக சந்தோஷமா இருக்கேன்.”

Continue reading “குடும்பம் ஒரு கதம்பம் – கதை”

தன் வினை தன்னைச் சுடும் – கதை

மங்களுரில் ராமு என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு நன்னன், பொன்னன் என இரு மகன்கள் இருந்தனர்.

நன்னன் பெயரில்தான் நன்னனே தவிர தந்திரம் நிறைந்தவன். ஏமாற்றுக்காரன். பொன்னன் நல்லவன். சூதுவாது தெரியாதவன்.

ராவிடம் ஒருகாரை வீடு, ஒருகூரை வீடு என இரு வீடுகளும், ஒரு கறவை மாடு, ஒரு மலட்டு மாடு என இரு மாடுகளும், நன்செய், புன்செய் என இருநிலங்களும் இருந்தன.

Continue reading “தன் வினை தன்னைச் சுடும் – கதை”

பணமில்லா பரிவர்த்தனை – கதை

இரவு 8:30 மணி

வாசலில் “..அம்மா… அம்மா ….” என்று கூப்பிடும் சத்தம் கேட்டு மங்கலம் வெளியே வந்தாள்.

“இதோ வந்துட்டேன்பா. யாரு? அட! நம்ப பிச்ச கண்ணு. இந்த நேரத்துல வந்து இருக்கியேப்பா… வீட்டுல ஒன்னும் சமைக்கல. நாங்களே சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு டெலிவரி பாய தான் எதிர் பார்த்துகிட்டு இருக்கிறோம்.”

Continue reading “பணமில்லா பரிவர்த்தனை – கதை”

க(ச)லப்புத் திருமணம் – கதை

முற்போக்குச் சிந்தனையாளரான நல்லசிவத்தைத் தேடி அன்று காலை இருவர் வந்து, அவர் மகள் திருமண விஷயமாக ஓர் வரன் குறித்துப் பேச முற்பட்டபோது கறாராகச் சொல்லிவிட்டார்.

Continue reading “க(ச)லப்புத் திருமணம் – கதை”

ஒரு பெண் நினைத்தால் – கதை

அன்றைய காரைக்கால் மிகவும் அமைதியாக இருக்கும்.

காத்தா பிள்ளை கோடியில் உள்ள முத்துப் பிள்ளை ரொட்டி கடையில் பக்கோடா என்றால் பேமஸ்.

அப்போதெல்லாம் பக்கோடாவை பேப்பர் சுத்தி பொட்டலமாக கொடுப்பார்கள். ஒரு பொட்டலம் 75 காசு.

ஒரு மாம்பழ வியாபாரி தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு 5 பொட்டலங்களை வாங்கி தன் பழ கூடையில் வைத்துவிட்டு சைக்கிளை தள்ளி கொண்டு நடந்தார்.

சிறிது தூரத்தில் பேருந்து நிலையத்தை ஒட்டியவாறு டைமண்ட் தியேட்டர் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு எதிரே உள்ள கடைக்குள் சென்று பழ வியாபாரி திரும்பி வெளியே வந்தார்.

நீண்ட நாள் பழகிய நண்பர் கண்ணில் பட்டார்.

“அடடே வாங்க பாய், எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆகுது ஆளையே காணோம்.”

Continue reading “ஒரு பெண் நினைத்தால் – கதை”