“கங்கிராட்ஸ் மிஸ்டர் ரவி! உங்க மனைவி கன்சீவாயிருக்காங்க!” – லேடி டாக்டர் சொன்ன செய்தியைக் கேட்டு சந்தோஷக் கடலில் மூழ்கிய ரவி, டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்ததும் மீனா கூறியதைக் கேட்டு அதிர்ந்தான்.
தலையில் இடி விழுதாற்போல் ஓர் உணர்வு. பதற்றத்துடன் “என்ன மீனா, என்ன சொல்றே?” எனக் கேட்டான்.
“நிஜமாத்தாங்க சொல்றேன். இப்போ இது தேவையா? கல்யாணமாகி முழுசா மூணு மாசங்கூட ஆகலே. எனக்கு வெட்கமா இருக்கு. கொஞ்சநாள் போனா ஆபிசுல எல்லோரும் கேலியாப் பேசுவாங்க. அதனால்தான் சொல்றேன்” என்றாள் மீனா.
Continue reading “யாருக்கும் வெட்கமில்லை – சிறுகதை”