யாருக்கும் வெட்கமில்லை – சிறுகதை

யாருக்கும் வெட்கமில்லை

“கங்கிராட்ஸ் மிஸ்டர் ரவி! உங்க மனைவி கன்சீவாயிருக்காங்க!” – லேடி டாக்டர் சொன்ன செய்தியைக் கேட்டு சந்தோஷக் கடலில் மூழ்கிய ரவி, டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்ததும் மீனா கூறியதைக் கேட்டு அதிர்ந்தான்.

தலையில் இடி விழுதாற்போல் ஓர் உணர்வு. பதற்றத்துடன் “என்ன மீனா, என்ன சொல்றே?” எனக் கேட்டான்.

“நிஜமாத்தாங்க சொல்றேன். இப்போ இது தேவையா? கல்யாணமாகி முழுசா மூணு மாசங்கூட ஆகலே. எனக்கு வெட்கமா இருக்கு. கொஞ்சநாள் போனா ஆபிசுல எல்லோரும் கேலியாப் பேசுவாங்க. அதனால்தான் சொல்றேன்” என்றாள் மீனா.

Continue reading “யாருக்கும் வெட்கமில்லை – சிறுகதை”

மகள் ஒரு தொடர்கதை – சிறுகதை

மகள் ஒரு தொடர்கதை

பந்தலும் தோரணமும் வாழை மரங்களும், பந்தலுக்கு நடுவே ‘வருக வருக’ என எழுதி மின்மினிப் பூச்சிகள் போல் விட்டு விட்டு மினுமினுக்கும் மின்சார விளக்குள்ள பலகையும், பந்தலுக்கு அடியில் வரிசையாக போடப்பட்டிருந்த மரத்தாலான இருக்கைகளும், சுரைக்காய் போல் பந்தல் மேல் இடைவெளி விட்டு நீட்டியிருந்த இரண்டு புனலில் ஓயாமல் கலகலப்பாக ஒலித்துக் கொண்டிருந்த சினிமா பாடல்களும் மனோ வீட்டில் ஏதோ விஷேஷம் என்பதை வெளிப்படுத்தின.

Continue reading “மகள் ஒரு தொடர்கதை – சிறுகதை”

காத்திருக்கும் சுகம் – சிறுகதை

காத்திருக்கும் சுகம்

அன்று அந்த மேனிலைப் பள்ளி காலை வேளையிலேயே அமர்க்களப்பட்டது.

ப்ளஸ் ஒன் மாணவர்கள், ப்ளஸ் டூ முடிந்து பள்ளியை விட்டுச் செல்லும் மாணவர்களுக்காக பிரிவு உபசார விழா ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ப்ளஸ் டூ தேர்வுகள் துவங்க இன்னும் ஓரிரு தினங்களே இருந்தன.

“அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?” என மாணவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

Continue reading “காத்திருக்கும் சுகம் – சிறுகதை”

வாய் முகூர்த்தம் – சிறுகதை

வாய் முகூர்த்தம் - சிறுகதை

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு, நான் அவரை சந்தித்தேன். அவர் வேறு யாரும் இல்லை எனது சித்தப்பாதான்.

என் அப்பாவின் உடன் பிறந்த தம்பி. இருவருக்குள்ளும் தாய் வழி உறவுதானே தவிர, தந்தை வழி உறவு கிடையாது.

எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அவரது வீட்டுக்குள் சென்றேன்.

வீட்டில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அந்த கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தார் அவர்.

நான் அவர் அருகில் சென்றுதான் நின்று கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. 

Continue reading “வாய் முகூர்த்தம் – சிறுகதை”

அன்னதானம் – சிறுகதை

அன்னதானம் - சிறுகதை

“என்னங்க, என்னங்க நம்ம பையன் பிறந்த நாளுக்கு அன்னதானம் போடலாம்னு சொன்னீங்களே!இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.

எங்க போடப் போறீங்க? யாருக்கு போடப் போறீங்க? எந்த ஹோட்டல், என்னென்ன ஆர்டர் பண்ணப் போறீங்க?

எதுவும் ரெடியானா மாதிரி எனக்கு தெரியலியே!” என மூச்சுவிடாமல் கேட்டு முடித்தாள் கோதாவரி.

Continue reading “அன்னதானம் – சிறுகதை”