ஏழையின் மதிப்பு – சிறுகதை

ஏழையின் மதிப்பு

அன்று தெருவில் யாரும் வெளியே இல்லை.

‘இராயல் ஸ்டீரீட்’ என்னும் பணக்காரர்கள் வசிக்கும் அந்த தெருவில் அனைத்து வீட்டிலும் கறிக்குழம்பு மணமும், மீன்குழம்பின் வாச‌மும் தென்றலைப் போல அருமையாக வீசின.

ஞாயிற்றுக் கிழமை என்ற ஒருநாள் நம் மக்களுக்கு மிகப்பெரிய வரமான நாள்.

வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், இறைச்சி, மீன், காய்கனி, மளிகை கடைகளுக்கும் பொன்னான நாள். வாரத்தில் கிடைக்கும் அந்த ஒரு ஓய்வுநாள் குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் கிடைக்காத பொக்கிஷம்.

Continue reading “ஏழையின் மதிப்பு – சிறுகதை”

அவமானம் – சிறுகதை

அவமானம் - சிறுகதை

தார் வெட்டப்பட்ட வாழை மரத்தில் இருந்து நீர் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டிருந்தது.

பழனிவேலு வாழை பயிரிடப்பட்டிருந்த வயலின் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தான்.

இரண்டாயிரத்து சொச்ச வாழைகள் பயிரிடப்பட்டிருந்ததில், கால்பகுதி வாழைகள் குலை தள்ளும் பருவத்தில் இருந்தன‌.

பாதிக்கும் மேற்பட்ட வாழைகள் குலை தள்ளியும் இருந்தன‌. சில வாழைக் குலைகள் அரைகுறை விளைச்சலிலும், இன்னும் சில வாழைக் குலைகள் நல்ல விளைச்சல் பருவத்திலும் இருந்தன‌.

Continue reading “அவமானம் – சிறுகதை”

அப்பாவின் காதலி – சிறுகதை

அப்பாவின் காதலி

“மெயின் ரோட்டில் ரெண்டு ஏக்கரில் இருந்த தென்னந்தோப்பை, அலமேலு ஆச்சியின் அழகில் உங்கப்பன் மயங்கி எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல் அடிமாட்டு விலைக்கு வித்துட்டான். எவ்வளவு பெரிய சொத்து தெரியுமா?”

முப்பத்தைந்து வருடமாய் பங்காளிகள் சொல்லும் இந்த வசவை கேட்டு, கேட்டு வளவனுக்கு வெறுத்து விட்டது.

இடம் போனதை பற்றி கவலை இல்லை. அவன் அப்பா பற்றி வரும் வதந்திதான் வளவனுக்கு உறுத்திக்கொண்டு இருக்கிறது.

வளவனின் அப்பா துரைபிள்ளை அந்த காலத்தில் பெரிய படிப்பாளி. அத்தனை திருக்குறளும் அத்துப்படி. வளவனையும் சிறுவயதிலேயே புத்தகம் பக்கம் தள்ளிவிட்டது அவர்தான்.

Continue reading “அப்பாவின் காதலி – சிறுகதை”

பழி தீர்ப்பு – சிறுகதை

ஆற்காடு சாலையின் வழியே குன்றத்தூரிலிருந்து வடபழனி வரை செல்லும் M88 பேருந்து பாய்க்கடை பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. ஸ்ருதி அதே பேருந்தில் கடைசி சீட்டில் அமர்ந்து யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

வடபழனி செல்வதற்காக முன் படிக்கட்டுகளின் வழியே ஏறிய சுரேஷின் பார்வையில் காலி இருக்கை ஒன்று தென்பட இருக்கை கிடைத்த சந்தோஷத்தில் பயணச்சீட்டை வாங்காமலே வேகமாக சென்று இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.

அந்த தடத்தில் ஓடும் பேருந்துகளில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும். மாறாக அன்று அந்த பேருந்தில் நெரிசல் அதிகம் இல்லாதிருந்தது.

சென்னை நகரப் பேருந்துகளின் நடத்துனர்கள் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

Continue reading “பழி தீர்ப்பு – சிறுகதை”

யாருக்காகவும் எதற்காகவும் – சிறுகதை

யாருக்காகவும் எதற்காகவும்

அவன் பேரு சுப்பையா. ஊரில் அவனை ‘தொப்பையன்’ என்றுதான் அழைப்பார்கள். ஊரில் யார் மனதும் புண்படு்ம்படி அவன் பேசியது கிடையாது.

பேசியது கிடையாது என்பதைவிட பேச தெரியாது என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். கள்ளம், கபடம், சூது, வாது என்று எந்த எண்ணமும் இல்லாதவன். வெகுளி. அன்பு என்ற வார்த்தையின் அடையாளம்.

குழந்தைகள் என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். அடுத்தவர் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாய் நினைப்பதாலோ என்னவோ அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

Continue reading “யாருக்காகவும் எதற்காகவும் – சிறுகதை”