பாகப்பிரிவினை – ‍சிறுகதை

பாகப்பிரிவினை

“அண்ணே! மேல கெடக்கியா? கீழ கெடக்கியா?” என்று கும்மிருட்டுக்குள் கையில் வீச்ச அரிவாளை வைத்து கொண்டு கேட்டான் வேத முத்து.

அடுத்த நொடியே “கீழ கெடக்கேன் தம்பி” என்று ஈன முத்துவிடம் இருந்து பதில் வந்தது.

அடுத்த நொடியே கையில் இருந்த வீச்ச அரிவாளை இறுகப் பற்றிக் கொண்டு ஓங்கி வெட்டினான் வேத முத்து.

அதற்கடுத்த நொடியில் ‘ஆ’ வென அலறினான் ஈன முத்து.

“அண்ணே! என்ன ஆச்சி?” என்றான் வேத முத்து.

உயிருக்கு போராடிய நிலையில் “என்னைய வெட்டிட்டயடா தம்பி” என்றான் ஈன முத்து.

ஈன முத்து சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் வேத முத்து.

Continue reading “பாகப்பிரிவினை – ‍சிறுகதை”

வீணையடி நீ எனக்கு – சிறுகதை

வீணையடி நீ எனக்கு

நர்மதாவை நாராயணனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எதையுமே தேர்வு செய்யும் விஷயத்தில் நாராயணனை மிஞ்ச எவருமில்லை என்னும் கூற்று, அவனைப் பொறுத்த மட்டில் இப்போதெல்லாம் பேத்தலாகவே பட்டது.

நண்பர்களும் உறவினர்களும் அவனைப் பற்றி வானளாவப் புகழ்ந்து தள்ளுகிற போதெல்லாம் ரொம்பப் பெருமையாகத்தான் இருந்தது. எல்லாம் திருமணமாகும் வரைதான்.

அலுவலக நண்பர்களின் பிரிவுபசார விழாவாகட்டும், உறவினர்களின் திருமணமாகட்டும் பரிசுகள் வாங்குவதிலிருந்து புடவை, நகை, பாத்திரங்கள் எதுவாயிருப்பினும் நாராயணன் இல்லாமல் எதுவும் நடக்காது.

அவ்வளவு நேர்த்தியாக, பாங்காக, தரமாகத் தேர்வு செய்வான். அவன் தேர்வு செய்துவிட்டால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடலாம்.

Continue reading “வீணையடி நீ எனக்கு – சிறுகதை”

மனம் கொத்திகள் – சிறுகதை

இண்டிகோ கார் ஒன்று தெருவில் வந்து நின்றது.

அதிலிருந்து குமரன் மணக்கோலத்தில் இறங்கி நின்றான். அவனை தொடர்ந்து இஷாவும் மணக்கோலத்தில் இறங்கினாள்.

அவர்களைப் பார்த்த அந்த தெருவுக்காரப் பெண் முப்பிடாதி, சங்கரனின் வீட்டுக்குள் ஓடினாள்.

தெருவில் நடப்பது எதுவும் தெரியாமல் வீட்டில் அமைதியாக  சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சங்கரன்.

முப்பிடாதி வேகமாக வருவதை பார்த்தவர் “முப்பிடாதி, என்ன அரக்க பறக்க ஓடி வர்ற? என்ன விஷயம்?”

Continue reading “மனம் கொத்திகள் – சிறுகதை”

மறுமணம் – சிறுகதை

மறுமணம் - சிறுகதை

மஞ்சுளா மறைந்து ஓராண்டு முடிந்து விட்டது.

ராமகிருஷ்ணன் முகத்தில் அப்பியிருந்த சோகம் மட்டும் மாறவில்லை.

ஷீலா பிறந்தது முதல் அவள் உடம்பை ஒன்று மாற்றி ஒன்று படுத்திக் கொண்டேயிருந்தது.

மனோ, யு.கே.ஜி போய்க் கொண்டிருந்தான்.

ஆயிரம் அலுவல்களுக்கிடையேயும் மஞ்சுளாவை அக்கறையுடன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தான்.

Continue reading “மறுமணம் – சிறுகதை”

செங்கல் ‍- சிறுகதை

செங்கல் ‍- சிறுகதை

ஐந்தாயிரம் சதுரடியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு தளத்தில் நான்கு மணி நேரமாக கரண்ட் இல்லாமல் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.

நூற்றி ஐம்பதிற்குக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேப்பரால் விசிறிக் கொண்டும், திறக்க முடியாத கண்ணாடி ஜன்னல்களை திறக்க முயற்சித்தும் புழுங்கி தவிக்கிறார்கள்.

ஐம்பது கோடி ரூபாய் ப்ராஜெக்ட். ஏற்கனவே இந்த ப்ராஜெக்ட் தாமதமாகி விட்டது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.

மும்பையிலிருக்கும் கம்பெனிச் சேர்மன் நிமிடத்திற்கு ஒருமுறை போன் செய்கிறார்.

Continue reading “செங்கல் ‍- சிறுகதை”