மது தரும் போதை உந்தன் கண்ணில் மின்ன – இரவு
மலர் தரும் வாசனையோ உன் முன்னே தோற்க
மெதுவாக எந்தன் நெஞ்சில் காயம் தர – உன்
மெல்லிய இடையொன்றே போதுமடி
உழைப்பாளி – சிறுகதை
கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது.
முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு.
“இப்படி பொளக்குதே வெயிலு” வாய்க்குள் முனங்கினாள்,
Continue reading “உழைப்பாளி – சிறுகதை”கனவு மெய்ப்பட – சிறுகதை
தார் சாலையில் இருந்து மண் ரோட்டில் இறங்கியது சைக்கிள்.
வழிநெடுகிலும் வயல்வெளிகள் சாலையோரத்தில் பனைமரங்களும் கருவேல மரங்களும் நிறைந்த பகுதியாக இருந்தது.
சுற்றிலும் பார்வையை செலுத்தியவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ஒருவர். அவருக்கு 55 வயது இருக்கும்.
பட்டு வேட்டி சட்டையுடன். வாயில் வெத்தலை பாக்கு மென்று கொண்டு மூக்குக் கண்ணாடி அணிந்தவாறு கையில் ஒரு பேக் உடன் பயணித்துக் கொண்டிருந்தார்.
Continue reading “கனவு மெய்ப்பட – சிறுகதை”பாடம் – கவிதை
சில சொற்களோடு
தொலைந்த
பல மௌனங்களும்
காணாமற் போயின!
தாயின் உன்னதம் – கவிதை
அம்மா என்ற முதல் வார்த்தை
ஆதி முதல் நவீனம் வரை
அழைக்கப்படும் வாழ்வு வார்த்தை
தேசம் மதம் மொழி அனைத்திலும்
உணர்வை ஊட்டும் உன்னத வார்த்தை
அம்மா நீ
கஷ்டத்தைத் தாங்கிக் கருவில் சுமந்தாய்
நஷ்டப்பட்டு லாபமாய்ப் பெற்றாய்