பிறைகள் – சிறுகதை

பிறைகள் – சிறுகதை

சென்னை சென்று மகள் காவேரி வீட்டில் ஒரு வாரம் தங்கி விட்டு திருச்சி திரும்பி நான்கு நாட்கள் ஆகியும், அம்மா மகேஸ்வரியின் மனம் ஒருவித தத்தளிப்பிலேயே மூழ்கியிருந்தது.

இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டுப் போகும்படி காவேரி எவ்வளவோ வற்புறுத்தியும், கௌரவம் குறுக்கே நின்று தடுத்ததால் கிளம்பி வந்துவிட்டாள்.

என்னதான் பெற்ற மகள் வீடு என்றாலும், மாப்பிள்ளை வீட்டில் எவ்வளவு நாட்கள் தங்குவது?

மாப்பிள்ளை மறுப்பு ஏதும் கூறப் போவதில்லை. இருப்பினும் ஒருவித தர்மசங்கடம் உள்ளத்தை உறுத்தியதால், மகளின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை.

Continue reading “பிறைகள் – சிறுகதை”

மெலியார்மேல் செல்லும் இடத்து ‍- சிறுகதை

அருள் உடைமை

சினிமா இயக்குநர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவருடைய கதைக்கு நான் திரைக்கதை மற்றும் வசனம் எழுதிக் கொடுத்திருந்தேன். அதை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தேடி வந்தார்.

அப்போது நான் ரவி என்கிற இயக்குநரின் படத்தில் துணை இயக்குநராக வேலை செய்து வந்தேன். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருந்தது.

Continue reading “மெலியார்மேல் செல்லும் இடத்து ‍- சிறுகதை”

கற்பு – சிறுகதை

கற்பு

சென்ற வாரம் இதே நேரம் மகிழ்ச்சியும் உற்சாகமுமாய் ஹால் முழுவதும் உறவினர்களும் நண்பர்களுமாய் நிறைந்து அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்க, இன்றோ ஒவ்வொருவரும் மன அமைதியைத் தொலைத்துவிட்டு, முகத்தில் இறுக்கம் சூழ, தலையில் கைவைத்தபடி ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து மௌனத்தில் மூழ்கியிருந்தனர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஹால் சுவர்க் கடிகாரம் காலை மணி பத்து என்பதைக் காட்டி தனது கடமையைச் செய்து விட்ட திருப்தியுடன் மணி அடிப்பதை நிறுத்திக் கொண்டது.

கிருஷ்ணகுமார் தான் அந்த மயான அமைதியைக் கலைத்தான்.

Continue reading “கற்பு – சிறுகதை”