பள்ளி செல்லுவோம்

பள்ளி

பள்ளி செல்லுவோம்

பள்ளி செல்லுவோம்

படிப்போடு பண்பாடும் தரும்

பள்ளி செல்லுவோம்

 

துள்ளி செல்லுவோம்

துள்ளி செல்லுவோம்

துடிப்போடு துவளாமல் தினந்தினம்

துள்ளி செல்லுவோம் Continue reading “பள்ளி செல்லுவோம்”

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம் ஒரு நல்ல கதை. இன்றைய இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயத்தை அழகாக விளக்கும் கதை.

ரவியும், மணியும் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றனர். ஏன் என்றால் அன்று ரசிகர் மன்றம் திறப்பு விழா.

மணிதான் தலைவர்.

தோரணங்களும், கொடிகளும் கட்டி ஒலிப்பெருக்கியில் சத்தமாக பாடல் ஒலித்தது. இளைஞர்கள் கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது.

சினிமாவில் நடிக்கும் நடிகருக்காக இளைஞர்கள் இப்படி நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறார்களே என கந்தசாமி மனம் வருந்தியது.

கந்தசாமி அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியாற்றும் போதே பல ஏழை மாணவர்களுக்குத் தன் சொந்த பணத்தில் உணவிட்டு, பண்டிகை நாட்களில் புத்தாடைகளையும் கொடுத்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர். Continue reading “ரசிகர் மன்றம்”

யார் சீடன்? – சிறுகதை

யார் சீடன்

யார் சீடன் என்பது ஒரு நல்ல கதை. வாழ்வினை எப்படி அணுக வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் அருமையான கதை. படியுங்கள்! பயன் பெறுங்கள்!

கரும்பையூர் என்ற ஊரில் சோமு, பாபு, கோபு என்ற நண்பர்கள் மூவர் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் தங்களுக்குக் குரு ஒருவரைத் தேர்வு செய்து அவரிடம் வாழ்க்கைக் கல்வி கற்க விரும்பினர்.

யாரிடம் கல்வி கற்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், தருப்பையூருக்கு அருகில் சம்பு என்றொரு சாது, ஆசிரம் அமைத்து வாழ்க்கைக் கல்வி கற்பிப்பதை கேள்வியுற்றனர். Continue reading “யார் சீடன்? – சிறுகதை”

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

ஏற்ற கலங்கள் எதிர்பொங்க மீதளிப்ப

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப என்ற இப்பாடல், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய,  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இருபத்தியோராவது பாசுரம் ஆகும்.

இறைவனிடம் காட்டும் மாசற்ற அன்பு, அவரை நம்மிடம் கட்டாயம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்த்தும் பாசுரம். Continue reading “ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப”

ஆசிரியர் – புதுக்குறள்

ஆசிரியர்

 

தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்

மனம் நிற்பவரே ஆசிரியர்

 

கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்

கற்று கொள்பவரும் ஆசிரியர் Continue reading “ஆசிரியர் – புதுக்குறள்”