வைகுந்தம் எவ்வளவு தூரம்?- சிறுகதை

வைகுந்தம்

வைகுந்தம் எவ்வளவு தூரம்? என்ற கதை இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பதை விளக்கும்.

பெருமாள்புரி என்ற நாட்டின் அரசர் கண்ணபெருமான் திருமால் அடியவர்.

திருமாலிடம் மாறாத பக்தி கொண்ட அவர், ஒருநாள் தன்னுடைய அரண்மனையில் பெருமாளின் அற்புதக் கதைகளை பாகவதர் ஒருவர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பாகவதர் கஜேந்திர மோட்சம் பற்றி, உணர்ச்சி பொங்க மிக அழகாக சொல்லிக் கொண்டிருந்தார். Continue reading “வைகுந்தம் எவ்வளவு தூரம்?- சிறுகதை”

மனித நேயம்

மனித நேயம்

ஆறாம் அறிவில் இத்தனை

வேற்றுமையா?

முற்றுப்பெறாத நிலவும்

முறைவிடாத உரிமையும்

பெரும் வெளிச்சம் தராது

உடைந்த கண்ணாடிச் சிதறல்கள்

ஒருபோதும் முழுமையான

உருவம் தராது Continue reading “மனித நேயம்”

எழுதுகோல்

எழுதுகோல்

எழுத்தின் தாய் எழுதுகோல்

எழுதுகோல் இல்லை எனில்

எழுதுபவரும் இல்லை உலகில்

எம்தேசியகவி பாரதியும் இல்லை

எம்தேசத்தின் கவிஞர்களும் இல்லை Continue reading “எழுதுகோல்”

நான்கு பொம்மைகள் – சிறுகதை

நான்கு பொம்மைகள்

நான்கு பொம்மைகள் கதையிலிருந்து நாம் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குமாரதேசம் என்ற நாட்டை தெய்வசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தார். மன்னருக்கு மணிசேனன் என்ற மகன் இருந்தான்.

அவ்விளவரசனுக்கு பதினாறு வயது நிரம்பி இருந்தபோது காலன் என்கின்ற முனிவர் அரண்மனைக்கு வந்தார்.

மன்னரைப் பார்த்து இளவரசன் மணிசேனனுக்கு நான்கு பொம்மைகள் பரிசளிக்க விரும்புவதாக முனிவர் காலன் தெரிவித்தார். Continue reading “நான்கு பொம்மைகள் – சிறுகதை”

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான என்ற இப்பாடல் பெண் ஆழ்வாரும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய‌ ஆண்டாள் அருளிய,  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இருபத்தி இரண்டாவது பாசுரம் ஆகும்.

இறைவனே, உன்னுடைய கடைக்கண் பார்வையால், எங்களுடைய பாவங்களை எல்லாம் போக்குவாய்! எனத் திருமாலை மனமுருகி வழிபாடு செய்யும் பாடல் இது.

Continue reading “அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான”