பிறப்பினிலே பெருமை கொண்டது
பெண்மை குணம்
பிறப்புக்கே வழிவகுக்கும்
தாய்மை இனம்
நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை
தரணீஸ்வரன் வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
தாமரை அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு காப்பியை போட்டு எடுத்துக் கொண்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தன் கணவருக்கு எடுத்து வந்தாள்.
Continue reading “நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை”உன் சாதனை உலகினை வென்றிடவே
காற்றைப் போல உணர்கிறேன் – மகளே உன்னை
கடும் வெயிலைப் போலும் நினைக்கிறேன்
ஊற்றினில் உன் முகம் காண்கிறேன் – மகளே உன்னை
உறுவெளி தன்னிலும் பார்கிறேன்
வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி
தன்முனைக் கவிதை எனும் வகைப்பாட்டில் உச்சத்தைத் தொட்ட நூலாகவும், இனி எழுத வரும் கவிஞர்களுக்கு முன் மாதிரியான நூலாகவும், காதலின் புது அகராதியாகவும் அமைந்திருக்கிறது கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’வலியின் புனைபெயர் நீ’ எனும் கவிதை நூல்.
Continue reading “வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி”புது அத்தியாயம் – சிறுகதை
காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டார் அண்ணாமலை.
இரவு முழுதும் உறங்கவே இல்லை. என்னவோ படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே பிடிக்காத ஓர் உணர்வு.
‘எழுந்து என்ன செய்ய போகிறோம்?’ என்ற பெரிய கேள்வி வேறு பயத்தை ஏற்படுத்தியது.
எதையோ இழந்தாற் போன்ற ஏக்கமும், பரிதவிப்பும் ஒன்று சேர்ந்து மனசை புரட்டுகிற ஒரு இம்சை. இரவு ஒரு நொடிப் பொழுதும் தூங்க விடாமல் செய்துவிட்டது.
Continue reading “புது அத்தியாயம் – சிறுகதை”