தமிழ்ப் புதையலைத் தேடி – பாரதிசந்திரன்

தொன்மை அல்ல; தொடர்ச்சியே தமிழின் பெருமை என்பதை நாம் அறிவோம். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக இருப்பதை விட, இன்றும் உயிர்ப்போடு இருப்பதே தமிழின் பெருமை.

தமிழின் இலக்கியம் தன்னிகரற்றது.

அறம் சார்ந்ததாக வாழ்க்கை அமைய வேண்டும் என்று நம் முன்னோர்கள் இலக்கியம் படைத்தார்கள்.

நம்மைப் பற்றிப் பிறர் அறியக் கூடிய புற வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும், நம்மைப் பற்றி நாம் மட்டுமே அறியும் அக வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் வாழ்க்கை இலக்கணம் சொல்லிச் சென்றார்கள்.

Continue reading “தமிழ்ப் புதையலைத் தேடி – பாரதிசந்திரன்”

பரிசு வென்ற‌ கனேடிய தமிழ் எழுத்தாளர்கள்

கனேடிய தமிழ் எழுத்தாளர்கள் மூவர் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்.

குரு அரவிந்தன்

எஸ்.பத்மநாதன்

ஆர்.என்.லோகேந்திரலிங்கம்

ஆகிய மூவரும், இலங்கையில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ஞானம் இதழ் நடத்திய, மாபெரும் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்.

Continue reading “பரிசு வென்ற‌ கனேடிய தமிழ் எழுத்தாளர்கள்”

கண்ணப்பரின் சிவன் சிலை வடிவானவரே

கண்ணப்பரின் சிவன், சிலை வடிவானவரே

எனக்கு வெகு நாட்களாகக் கண்ணப்ப நாயனார் புராணம் குறித்த ஓர் ஐயம்! அதில், திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ‘குடுமித் தேவர்‘ என்று தான் குறிப்பிடப்படுகிறார்.

கண்ணப்பரும், அர்ச்சகரும் அக்குடுமித் தேவருக்கு மலர்கள் சூடுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற வருணனைகளும் சிவன் உருவச்சிலை வடிவாக இருந்ததையே காட்டுகின்றன.

Continue reading “கண்ணப்பரின் சிவன் சிலை வடிவானவரே”

பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்

செல்லம்மாள் பாரதி

பாரதியை இச்சமூகம் ஒரு மாபெரும் புரட்சியாளனாகக் கொண்டாடி மகிழ்கிறது.

இன்று பல்வேறு அரங்குகளிலும் பாரதியை கொண்டாடுகின்ற அளவிற்கு அவரது மனைவி செல்லம்மாள் நினைவு கூறப்படவில்லை.

அவனோடு இருபத்து ஐந்து ஆண்டுகள் வெறுமை நிறைந்த வறுமை வாழ்க்கை வாழ்ந்த அந்த செல்லம்மாள் தியாக தீபமாய் ஒளிர்கிறாள்.

Continue reading “பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்”

பாலை என்றோர் நிலமுண்டு

பாலை

பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஐவகை நிலங்களில், பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதை மறுத்து, பாலை என்ற ஒரு தனிவகை நிலம் உண்டு என இந்தக் கட்டுரை மூலம் நிறுவ முயற்சி செய்கிறார் காவடி மு.சுந்தரராஜன்.

தொல்காப்பியர் பாலையை ஒரு தனி நிலமாகக் குறிப்பிடவில்லை எனப் பலர் இந்தச் செய்யுளை எடுத்துக் காட்டுவர். அவர் நிலங்களை நான்காகவே இப்பாடலில் காட்டுகிறார்.

மாயோன் மேய காடு உறை உலகமும், 
சேயோன் மேய மை வரை உலகமும், 
வேந்தன் மேய தீம் புனல் உலகமும், 
வருணன் மேய பெரு மணல் உலகமும், 
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச் 
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே ( பொருள் – 5 )

Continue reading “பாலை என்றோர் நிலமுண்டு”