A FRAME குறும்படம் நம் வாழ்வை சட்டகங்களுக்குள் அடக்கிக் கொள்வதைப் பற்றி எடுத்துக் காட்டுகிறது.
வாழ்க்கையின் பக்கங்களில் உள்ள சட்டகங்களின் அடுக்குகள் தேவையா? தேவையில்லையா? என விளக்குகிறது இந்த மராத்தியக் குறும்படம்.
ஒவ்வொருவரும் குறைந்தது 1000 சட்டகங்களையாவது தனக்குள் வைத்துக் கொண்டு, அதை மீறி விடாது வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டு, மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். அதுதான் வாழ்வா?
”பாவனையால் வாழ்ந்து விடும் சாத்தியம் உண்டு” என்பார் கவிஞர் அபி.
”எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒருவரைச் செதுக்குவதற்கு உளிகள் வருகின்றன” என்பது முன்னோர் வாக்கு.
“பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்பது கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் புறநானூற்று வரியாகும்.
Continue reading “A FRAME குறும்படம் விமர்சனம்”