நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை

குட்டித் தவளை - சிறுவர் கதை

சோலையூரில் அழகிய குளம் ஒன்று இருந்தது. அக்குளம் நீரால் நிரம்பி வழிந்தது. அக்குளத்தில் தாமரை, அல்லி, குவளை போன்ற தாவரங்கள் காணப்பட்டன.

செந்தாமரை வெண்தாமரை மற்றும் குவளை மலர்களால் பகலிலும், செவ்வல்லி மற்றும் வெள்ளல்லி மலர்களால் இரவிலும் மிகவும் அழகாகக் குளம் காட்சியளித்தது.

அக்குளத்தில் அயிரை, கெண்டை, விரால், தங்கமீன் போன்ற மீன் வகைகளும், தவளைகளும் சந்தோசமாகச் சுற்றித் திரிந்தன.

அக்குளத்தில் சங்கு என்ற குட்டித் தவளை ஒன்று வசித்தது. அது மிகவும் அன்பானது. எல்லோரிடமும் மிகவும் நட்புடன் பழகும்.

Continue reading “நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை”

காளான் குழம்பு – சிறுகதை

சுவையான காளான் குழம்பு

காளான் குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.

என்னுடைய மகள் பிள்ளை பேத்திக்கு காளான் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.

“ஆச்சி நீங்க வைக்கும் காளான் குழம்பின் ருசியே தனி. இன்னைக்கு மதியம் குழம்பு காளான்தான்.” என்று என்னைக் கட்டியணைத்து கெஞ்சினாள்.

“உனக்கு செய்து தராம வேறு யாருக்கு செஞ்சுதரப் போறேன் என் கன்னுக்குட்டி.” என்றபடி அவளின் கன்னத்தை மெதுவாகக் கிள்ளிக் கொஞ்சி காளான் குழம்பினை தயார் செய்து கொண்டிருந்தேன்.

காளான் குழம்பின் செய்முறை என்னுடைய தாய்வழி பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது.

என்னுடைய பாட்டி கைதேர்ந்த சமையலரசி. எந்த உணவினைத் தயார் செய்தாலும் எளிமையான மூலப்பொருட்களையே உபயோகிப்பார். அவரின் சமையலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை.

Continue reading “காளான் குழம்பு – சிறுகதை”

தகவலின் ஊடே வந்த நினைவுகள் – சிறுகதை

தகவலின் ஊடே வந்த நினைவுகள்

‘சண்முகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்’ என்ற தகவல் கேட்டு அதிர்ந்து போயிட்டேன்.

‘சில ஆண்டுகளுக்கு முன் அவனது மகன் வெளிநாடு சென்றுவிட்டான். புதியதாக இரண்டு அடுக்கு மாளிகை கட்டி விட்டான்’ என்ற தகவல் வந்தபோது ‘என் மகனே சென்றது போலவும், நானே வீடு கட்டி விட்டது போலவும்’ சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

மற்றவர் பார்வையில் அவன் எப்படியோ எனது பார்வையில் எனக்கு அவன் நல்ல‌வன்தான். சிறுவயது நண்பன் அல்ல, இருபது ஆண்டுகளாகதான் அவனை எனக்கு தெரியும்.

Continue reading “தகவலின் ஊடே வந்த நினைவுகள் – சிறுகதை”

ஞானம் பிறந்தது – சிறுகதை

ஞானம் பிறந்தது - சிறுகதை

கம்பெனியிலிருந்து டெலிவரிக்காகக் கிளம்பிக் கொண்டிருந்த சமயம் சக ஊழியர் ஒருவர், “சரவணா, உனக்கு போன்” என்றதும், ட்ரை சைக்கிளை அப்படியே நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே ஓடினான் சரவணன்.

சரவணனின் பக்கத்து வீட்டிலிருந்து பேசினார்கள். வள்ளிக்கு வலி எடுத்துவிட்டதாகவும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல உடனே கிளம்பி வரும்படியும் சொன்னார்கள்.

சரவணனுக்கு கையும் காலும் ஓடவில்லை. முகத்தில் திகிலும் பரபரப்பும் ஒருசேரத் தோன்றின.

Continue reading “ஞானம் பிறந்தது – சிறுகதை”

சைக்கிள் – சிறுகதை

சைக்கிள் - சிறுகதை

‘சைக்கிள் வாங்குவது’ என்பது அருணகிரியின் குழந்தைகள் ஒவ்வொருத்தருடைய பல வருட‌ கனவு.

ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் எல்லோரும் படித்தார்கள்.

முதலாவதாக அந்த பள்ளியில் போய் சேர்ந்தது மூத்த மகன்  இசக்கி. அடுத்து இரண்டு ஆண்டுகள் சென்று இரண்டாவது மகன் வேலன்.

இவ்வாறு இரண்டு இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் பிள்ளைகள் ஒவ்வொருத்தரும் போய் அந்த பள்ளியில் சேர்ந்தார்கள். கடைசியாக கடைக்குட்டி கல்யாணியும் வந்து சேர்ந்தாள். 

Continue reading “சைக்கிள் – சிறுகதை”