கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிடுச்சா?

ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிது புதிதாய் மாணவர்களை சந்திக்கும் பாக்கியம் என் போன்ற ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இனிய அனுபவமாகும்.

புதிய மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்பு எடுக்கச் செல்லும் போது, பரஸ்பர அறிமுகங்கள் மற்றும் நல விசாரிப்புகளுக்குப் பின் நான் எனது வகுப்பினை ஒரு கேள்வியுடன் ஆரம்பிப்பது வழக்கம்.

நான் ஒரு வேதியியல் பேராசிரியர். எனவே எனது முதல் கேள்வி என்னவென்றால் “What is Chemistry?” என்பதுதான்.

அதாவது கெமிஸ்ட்ரி என்றால் என்ன?

இதற்கு பல தரப்பட்ட பதில்களை நான் கிடைக்கப் பெற்றிருக்கின்றேன்.

Continue reading “கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிடுச்சா?”

அவமானம் – சிறுகதை

அவமானம் - சிறுகதை

தார் வெட்டப்பட்ட வாழை மரத்தில் இருந்து நீர் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டிருந்தது.

பழனிவேலு வாழை பயிரிடப்பட்டிருந்த வயலின் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தான்.

இரண்டாயிரத்து சொச்ச வாழைகள் பயிரிடப்பட்டிருந்ததில், கால்பகுதி வாழைகள் குலை தள்ளும் பருவத்தில் இருந்தன‌.

பாதிக்கும் மேற்பட்ட வாழைகள் குலை தள்ளியும் இருந்தன‌. சில வாழைக் குலைகள் அரைகுறை விளைச்சலிலும், இன்னும் சில வாழைக் குலைகள் நல்ல விளைச்சல் பருவத்திலும் இருந்தன‌.

Continue reading “அவமானம் – சிறுகதை”

எல்லாம் உனது – கவிதை

ஒவ்வொன்றும் இருவகையுண்டு

ஒரு முனைதனில் மறுமுனையுண்டு

வீரத்தினில் கோழையுண்டு

கோழையிலும் வீரமுண்டு

நன்மைதனில் தீமையுண்டு

Continue reading “எல்லாம் உனது – கவிதை”

அப்பாவின் காதலி – சிறுகதை

அப்பாவின் காதலி

“மெயின் ரோட்டில் ரெண்டு ஏக்கரில் இருந்த தென்னந்தோப்பை, அலமேலு ஆச்சியின் அழகில் உங்கப்பன் மயங்கி எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல் அடிமாட்டு விலைக்கு வித்துட்டான். எவ்வளவு பெரிய சொத்து தெரியுமா?”

முப்பத்தைந்து வருடமாய் பங்காளிகள் சொல்லும் இந்த வசவை கேட்டு, கேட்டு வளவனுக்கு வெறுத்து விட்டது.

இடம் போனதை பற்றி கவலை இல்லை. அவன் அப்பா பற்றி வரும் வதந்திதான் வளவனுக்கு உறுத்திக்கொண்டு இருக்கிறது.

வளவனின் அப்பா துரைபிள்ளை அந்த காலத்தில் பெரிய படிப்பாளி. அத்தனை திருக்குறளும் அத்துப்படி. வளவனையும் சிறுவயதிலேயே புத்தகம் பக்கம் தள்ளிவிட்டது அவர்தான்.

Continue reading “அப்பாவின் காதலி – சிறுகதை”