பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்

செல்லம்மாள் பாரதி

பாரதியை இச்சமூகம் ஒரு மாபெரும் புரட்சியாளனாகக் கொண்டாடி மகிழ்கிறது.

இன்று பல்வேறு அரங்குகளிலும் பாரதியை கொண்டாடுகின்ற அளவிற்கு அவரது மனைவி செல்லம்மாள் நினைவு கூறப்படவில்லை.

அவனோடு இருபத்து ஐந்து ஆண்டுகள் வெறுமை நிறைந்த வறுமை வாழ்க்கை வாழ்ந்த அந்த செல்லம்மாள் தியாக தீபமாய் ஒளிர்கிறாள்.

Continue reading “பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்”

பழி தீர்ப்பு – சிறுகதை

ஆற்காடு சாலையின் வழியே குன்றத்தூரிலிருந்து வடபழனி வரை செல்லும் M88 பேருந்து பாய்க்கடை பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. ஸ்ருதி அதே பேருந்தில் கடைசி சீட்டில் அமர்ந்து யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

வடபழனி செல்வதற்காக முன் படிக்கட்டுகளின் வழியே ஏறிய சுரேஷின் பார்வையில் காலி இருக்கை ஒன்று தென்பட இருக்கை கிடைத்த சந்தோஷத்தில் பயணச்சீட்டை வாங்காமலே வேகமாக சென்று இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.

அந்த தடத்தில் ஓடும் பேருந்துகளில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும். மாறாக அன்று அந்த பேருந்தில் நெரிசல் அதிகம் இல்லாதிருந்தது.

சென்னை நகரப் பேருந்துகளின் நடத்துனர்கள் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

Continue reading “பழி தீர்ப்பு – சிறுகதை”

பாலை என்றோர் நிலமுண்டு

பாலை

பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஐவகை நிலங்களில், பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதை மறுத்து, பாலை என்ற ஒரு தனிவகை நிலம் உண்டு என இந்தக் கட்டுரை மூலம் நிறுவ முயற்சி செய்கிறார் காவடி மு.சுந்தரராஜன்.

தொல்காப்பியர் பாலையை ஒரு தனி நிலமாகக் குறிப்பிடவில்லை எனப் பலர் இந்தச் செய்யுளை எடுத்துக் காட்டுவர். அவர் நிலங்களை நான்காகவே இப்பாடலில் காட்டுகிறார்.

மாயோன் மேய காடு உறை உலகமும், 
சேயோன் மேய மை வரை உலகமும், 
வேந்தன் மேய தீம் புனல் உலகமும், 
வருணன் மேய பெரு மணல் உலகமும், 
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச் 
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே ( பொருள் – 5 )

Continue reading “பாலை என்றோர் நிலமுண்டு”