கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
மம்தா ஒரு
மாநிலத் தலைவர் – 62% (8 வாக்குகள்)
தேசியத் தலைவர் – 38% (5 வாக்குகள்)
இணைய இதழ்
கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
மாநிலத் தலைவர் – 62% (8 வாக்குகள்)
தேசியத் தலைவர் – 38% (5 வாக்குகள்)
கண்களை மூடிக் கொண்டு
கருத்துக்கள் சிதறா வண்ணம்
கடிவாளம் போட்டு வைத்தேன்
நினைவு கூர்கிறேன்
நிஜத்திலிருந்து உண்மைக்கும்
மற்றும் அந்தகாரத்தில் இளைப்பாற
வழி நடத்தப்படுகிறேன்
Continue reading “அந்தரம் – கவிதை”அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கான அறையில் அமர்ந்து மும்மரமாகக் கட்டுரை நோட்டுகளைத் திருத்திக் கொண்டிருந்த காயத்ரி டீச்சர் அறைவாசலில் நிழலாடுவதைக் கவனித்து நிமிர்ந்து பார்த்த போது, பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவின் மாணவன் சுரேஷ் தயங்கியபடி நின்று கொண்டிருந்தான்.
“என்ன சுரேஷ்? உள்ளே வா” என்ற டீச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, மெதுவாக அக்கம் பக்கம் பார்த்தபடி பவ்யமாகப் போய் நின்றான் சுரேஷ்.
அவன் ஏதோ சொல்ல வந்திருப்பதை அறிந்த காயத்ரி டீச்சர், “என்ன விஷயம் சுரேஷ்?” எனக் கேட்டார்.
“மேடம், தியாகுவோட அட்டகாசம் நாளுக்கு நாள் ரொம்பவும் அதிகமாயிக்கிட்டே இருக்கு. நேற்று நீங்க அவனைக் கூப்பிட்டுக் கண்டிச்சு வெளியே அனுப்பினீங்கல்லே? அதுக்காக அவன் என்ன செஞ்சுக்கிட்டிருக்கான் தெரியுமா டீச்சர்?” என்றவன் மேற்கொண்டு சொல்ல முடியாமல் தயங்கினான்.
Continue reading “வழிகாட்டி – சிறுகதை”பாவ் பாஜி மசாலா பொடி தரமாக இருந்தால் பாவ் பாஜியின் சுவை மிக நன்றாக இருக்கும்.
பாவ் பாஜி மும்பையின் புகழ்பெற்ற சைவ வகை உணவு ஆகும். மில் தொழிலாளர்களால் விரும்பப்பட்ட இவ்வுணவு, தற்போது மும்பையின் தெருமுனைகளிலும் விற்பனை செய்யப்படும் அளவுக்கு பிரபலமானது.
‘பாவ்’ என்றால் ‘ரொட்டி’ என்பதும் ‘பாஜி’ என்றால் ‘காய்கறி’ என்பதும் பொருளாகும்.
பாவ் பாஜி தயார் செய்யத் தேவையான மசாலா பொடியை நாம் வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம்.
Continue reading “பாவ் பாஜி மசாலா பொடி செய்வது எப்படி?”