மறுபடி – படிப்பது எப்படி?- பாகம் 5

மறுபடி மறுபடி படி

மறுபடி மறுபடி படிப்பதுதான் நன்கு படிப்பதன் ரகசியம்.

படிக்க ஆரம்பித்து, படிப்பு மேல் இருக்கும் வெறுப்பினைத் தள்ளுபடி பண்ணி, படி அதுவே நம்மை உயர்த்தும் படி என்பதனை உணர்ந்து, புரிந்து படிக்கும் அன்பர்களுக்கு நான் அறிமுகப்படுத்தும் அடுத்த படி ‘மறுபடி’.

ஒரு துறையிலோ அல்லது கலையிலோ நாம் விற்பன்னராக வேண்டுமானால், தெளிவாகப் படித்துத் தெரிந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் படித்துப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

தேர்வுகளுக்கு தயார் செய்யும் போது, படித்த விஷயங்களை தேர்வு முடிந்தவுடன் மறந்து விடுவது, உண்மையான படிப்பினையை நமக்குத் தராது.

Continue reading “மறுபடி – படிப்பது எப்படி?- பாகம் 5”

மகளின் பிறந்த நாள் வாழ்த்து

என் உயிர் தந்த என் உயிருக்கு

உயிர் வந்த நாள் இன்று!

கண்ணுக்குள் வைத்தென்னைக் காப்பாற்றும்

கண்மணி அவள் கண்விழித்த நாள் இன்று!

Continue reading “மகளின் பிறந்த நாள் வாழ்த்து”

மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை

மாடென்று எதனைச் சொல்வீர் - சிறுகதை

“40 ஆயிரத்தை கொடுத்து ஒரு கிழ மாட்டை வாங்கி வந்திருக்கியே?” என்று ஊரில் உள்ள எல்லோரும் மாணிக்கத்திடம் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

மாணிக்கம் மாடு வாங்குவதில் ஒன்றும் புதிய ஆள் இல்லை. கடந்த 20 வருடமாக பால் கறந்து வியாபாரம் செய்து வருபவர்.

மாணிக்கம் மாடுகளை குடும்ப உறுப்பினர்களாக பாவிப்பார். மாட்டுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறி விடுவார்.

மாடுகள் வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் மனிதர்களுக்கு செய்வது போலவே ஈமக்கிரியைகள் செய்து போற்றுவார்.

Continue reading “மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை”