படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் – புத்தக மதிப்புரை

படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் - புத்தக மதிப்புரை

படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் புத்தகத்தை படிக்க நான் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டேன்.

ஒரே மூச்சில் படித்து முடிக்க, இது ஒரு நாவலோ வரலாற்றுக் கதையோ காதல் கவிதைகளோ அல்ல.

எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதிய இந்த நூலில் பல்வேறு திசைகளில் இருந்தும் திரட்டப்பட்ட பல்வேறு அறிவார்ந்த விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

24 தலைப்புகளில், 24 கோணங்களில், 24 வெவ்வேறு தளங்களில் அதே சமயம் ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத, ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தகவல் திரட்டாக இந்தப் புத்தகம் எனக்கு ஒரு புதிய பரிணாமத்தைத் தந்துள்ளது.

Continue reading “படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் – புத்தக மதிப்புரை”

மாரிக் கால சிந்தனை – கவிதை

மாரி என்றால் மழை என்று பொருள். 2021ம் ஆண்டு சென்னையின் பெருமழை பாதிப்பைப் பார்த்து வருத்தமும் கோபமுமாய் எழுந்த கவிதை.

ஏரி வாய்க்காலைத் தூக்கி விழுங்கியோர்
தப்பிப் பிழைத்த லரிது

காரிகாரி உமிழ்ந்தும் கேட்காத மக்கள்
மாரியால் ஆவார் மாக்கள்

வீடுவீடென்று மாடியில் மாடி கட்டியோர்
நாறுநாறென்று நாறுவரே மாரியால்

Continue reading “மாரிக் கால சிந்தனை – கவிதை”

பாகப்பிரிவினை – ‍சிறுகதை

பாகப்பிரிவினை

“அண்ணே! மேல கெடக்கியா? கீழ கெடக்கியா?” என்று கும்மிருட்டுக்குள் கையில் வீச்ச அரிவாளை வைத்து கொண்டு கேட்டான் வேத முத்து.

அடுத்த நொடியே “கீழ கெடக்கேன் தம்பி” என்று ஈன முத்துவிடம் இருந்து பதில் வந்தது.

அடுத்த நொடியே கையில் இருந்த வீச்ச அரிவாளை இறுகப் பற்றிக் கொண்டு ஓங்கி வெட்டினான் வேத முத்து.

அதற்கடுத்த நொடியில் ‘ஆ’ வென அலறினான் ஈன முத்து.

“அண்ணே! என்ன ஆச்சி?” என்றான் வேத முத்து.

உயிருக்கு போராடிய நிலையில் “என்னைய வெட்டிட்டயடா தம்பி” என்றான் ஈன முத்து.

ஈன முத்து சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் வேத முத்து.

Continue reading “பாகப்பிரிவினை – ‍சிறுகதை”

கனமழையை சமாளிக்கும் வகையில்

வெள்ளம்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

கனமழையை சமாளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன

இல்லை – 53% (9 வாக்குகள்)

ஆம் – 47% (8 வாக்குகள்)

லில்லி குறும்படம் விமர்சனம்

லில்லி குறும்படம்

லில்லி குறும்படம் அனைத்து உயிர்களிடத்தும் இயற்கையான பாலியல் உணர்வுகள் உண்டு என்பதை ஆழமான வலியுடன் விளக்குகிறது.

“கூனோ, குருடோ, ஊனோ, முடமோ உணர்ச்சிக்கும் புணர்ச்சிக்கும் உணர்வுகள் எல்லா உயிர்க்கும் பொது தானே” என்ற வசனத்தில் பொதிந்துள்ள நிதர்சனப் பெருவெளியை இக்குறும்படம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

நீங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் வலியை, வேதனையைப் பெற்றுக் கொண்டே இருக்க விரும்பாதவர்களா? அப்படியாயின் இக்குறும்படத்தைப் பார்க்காதீர்கள். இந்த விமர்சனத்தையும் படிக்காதீர்கள்.

Continue reading “லில்லி குறும்படம் விமர்சனம்”