கார வகைகள் – வீட்டிலேயே செய்து அசத்தலாம்

கார வகைகள்

கார வகைகள் பலவற்றை வீட்டிலேயே செய்து அசத்தலாம். அவற்றை சில நாள் வைத்திருந்து உண்ணலாம்; பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடைவேளை உணவாகக் கொடுத்து அனுப்பலாம்.

கார வகைகள் செய்யும் முறை பற்றி விளக்குகிறார் ஜான்சிராணி வேலாயுதம்.

Continue reading “கார வகைகள் – வீட்டிலேயே செய்து அசத்தலாம்”

சிறப்புலி நாயனார் – ஆயிரத்தில் ஒருவரின் அடியார்

சிறப்புலி நாயனார்

சிறப்புலி நாயனார் திருவைந்தெழுத்தை ஓதி வேள்விகள் செய்து அடியார்கள் தொண்டிலும் சிறந்து விளங்கிதால் புகழ்பெற்ற மறைவர்.

சோழநாட்டில் இருந்த ஆக்கூர் என்னும் ஊர் சிறந்த நீர்வளமும் நிலவளமும் கொண்டிருந்தது. அங்குள்ள திருக்கோவிலுக்கு தான்தோன்றி மாடம் என்பது பெயராகும்.

ஆக்கூர் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Continue reading “சிறப்புலி நாயனார் – ஆயிரத்தில் ஒருவரின் அடியார்”

கால்தடம் குறும்படம் விமர்சனம்

கால்தடம் குறும்படம்

கால்தடம் குறும்படம் குழந்தைகளின் உலகை நமக்குக் காட்டுகின்றது. அது ஏழை பணக்காரன் என்ற ஒன்றில் இல்லை. மாறாக‌ அது எல்லையற்ற அன்பை உடையது.

பணக்காரர் வீடு ஒன்றில் தந்தை, பெண் குழந்தையின் விளையாட்டுகளைத் தன் செல்போனில் படம் எடுத்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.

அவரின் பெண்குழந்தை விலை உயர்ந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு மூடுகிறது; எழுந்து நடக்கிறது.

அப்பாவின் ஷூ ஒரு ஓரத்தில் கிடக்கிறது. அதில் கால்களை விட்டு மிகுந்த சந்தோஷத்தில் அந்த ஷூ உடன் நடந்து பார்க்கிறது.

Continue reading “கால்தடம் குறும்படம் விமர்சனம்”

கானெக்கானெ மலையாளப் படம் விமர்சனம்

கானெக்கானெ மலையாளப் படம்

கானெக்கானெ மலையாளப் படம் திரைப்பட வரலாற்றின் சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதத் தக்கது.

சில குற்றவுணர்வுகள், மலரும் மலர்களனைத்தின் மணத்தை மாற்றி விடும் தன்மையுடையவை.

எல்லா வெளியிலும் அதன் வண்ணம் தெரிவதைப் போல், எண்ணி எண்ணிப் பயந்து முழுதும் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆமையாகிப் போகிறது வாழ்க்கை.

Continue reading “கானெக்கானெ மலையாளப் படம் விமர்சனம்”