பூணூல் – ஓர் அறிமுகம்

பூணூல்

பூணுகின்ற (அணிகின்ற‌) நூல் பூணூல் ஆனது. இந்தப் பூணூலை எல்லோரும் தரிக்கலாம். இன்னார்தான் தரிக்க வேண்டுமென எந்த நியதியுமில்லை.

அறிந்தவர்கள் முப்புரிநூலை அணிந்திருந்ததாக சங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.

“புரி நூல் மார்பீர்” என்று மணிமேகலையில் பேசக் காண்கின்றோம்.

Continue reading “பூணூல் – ஓர் அறிமுகம்”

உயர்த்தும் படி – படிப்பது எப்படி? – பாகம் 3

உயர்த்தும் படி

என்ன நேயர்களே தள்ளிப்போடுறத தள்ளி வைத்து விட்டு படிக்க ஆரம்பித்து விட்டீர்களா? அடுத்த படி என்ன? அதுதானே உங்க கேள்வி!

படி; அதுவே உன்​னை உயர்த்தும் படி!

படி; அது உன்​னை உயர்த்தும்படி!

அதாவது படிப்பது மட்டும்தான் நம்​மை உயர்வ​டையச் ​செய்யும் உன்னதமான யுக்தி. அதனால் வளர்வது நமது புத்தி. அது தரும் வாழ்வில் நாம் உயர்ந்த நி​லையி​னை அ​டையக் கூடிய சக்தி.

இப்​போது நீங்கள் உங்கள் பருவத் ​தேர்வுகளுக்காக​வோ அல்லது விண்ணப்பித்த ​போட்டித் ​தேர்வுகளுக்காக​வோ படிப்பதாக ​வைத்துக் ​கொள்​​வோம்.

Continue reading “உயர்த்தும் படி – படிப்பது எப்படி? – பாகம் 3”

செங்கல் ‍- சிறுகதை

செங்கல் ‍- சிறுகதை

ஐந்தாயிரம் சதுரடியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு தளத்தில் நான்கு மணி நேரமாக கரண்ட் இல்லாமல் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.

நூற்றி ஐம்பதிற்குக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேப்பரால் விசிறிக் கொண்டும், திறக்க முடியாத கண்ணாடி ஜன்னல்களை திறக்க முயற்சித்தும் புழுங்கி தவிக்கிறார்கள்.

ஐம்பது கோடி ரூபாய் ப்ராஜெக்ட். ஏற்கனவே இந்த ப்ராஜெக்ட் தாமதமாகி விட்டது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.

மும்பையிலிருக்கும் கம்பெனிச் சேர்மன் நிமிடத்திற்கு ஒருமுறை போன் செய்கிறார்.

Continue reading “செங்கல் ‍- சிறுகதை”

கடலழகி மற்றும் சில கவிதைகள்

ஏழைகளின் அரசு

ஏழைகளுக்கு தயக்கமே இல்லை!
அரசாங்கத்தை கண்டால் மட்டும் ஏதோ…

சுயநலம்

அனைவருமே சுயநலவாதிகள் தான்
உறங்கும்போது

Continue reading “கடலழகி மற்றும் சில கவிதைகள்”

பசி – ‍சிறுகதை

பசி - சிறுகதை

“எலே நாராயணா, நேத்து ஆட்ட மேய்ச்சலுக்கு எங்கல ஓட்டிட்டு போயிருந்த?” என்று கேட்டவாறு புஞ்சை பயிர்களுக்கு நடுவே வரப்பில் நடந்து வந்து நின்றார் சுப்பராயலு பண்ணையார்.

மேய்ச்சல் காடும் வயல் காடும் சேரும் இடத்தில் நின்று கொண்டு, பயிர்க‌ளுக்குள் ஆடுகளை வரவிடாமல் தடுத்தவாறு நின்று கொண்டிருந்த நாராயணன் சத்தம் கேட்டு, தோளில் கிடந்த துண்டை அவசர அவசரமாக எடுத்து கையில் வைத்துக்கொண்டு வணங்கியவாறு,

“சாமி, நேத்து கீழ காட்டுக்கு ஓட்டிட்டு போயிருந்தேனுங்க.”

“பொய் சொல்லாதல.”

“நெசமாதான், சொல்றேன் சாமி.”

Continue reading “பசி – ‍சிறுகதை”