சிரிப்பு – கவிதை

சிரிப்பு

எல்லாவற்றையும்
மறந்து போக செய்யும்
மாயக்காரன் சிரிப்பு!

கழுதையும்
காட்டெருமையும்
இன்னும் சிரிக்க கற்றுக்கொள்ளவில்லை!

கடவுள்,
மனிதனுக்குக் கொடுத்த
மகா உன்னதமான வரம்
சிரிப்பாகும்…

Continue reading “சிரிப்பு – கவிதை”

பெண் போலீஸ் – சிறுகதை

பெண் போலீஸ்

முதலமைச்சர் கோட்டையிலிருந்து பக்கத்து மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சாலை மார்க்கமாக பயணம் செய்யப் போகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றது.

ஏராளமான ஆண், பெண் போலீஸ்காரர்களை சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்துள்ளார்கள். அப்படித்தான் பெண் போலீஸ் திலகவதிக்கும் இன்று டியூட்டி.

போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையில் அவள் காலை 7 மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறாள். முதலமைச்சரின் கான்வாய் தோராயமாக பதினோரு மணி அளவில் கடக்கக் கூடும் என்று சொல்கிறார்கள்.

Continue reading “பெண் போலீஸ் – சிறுகதை”

தமிழா?அமிழ்தா? – கவிதை

தமிழ்

செந்தமிழே! என் தமிழே!
தித்திக்கும் செங்கரும்பை ஒத்தவளே
தேன் சிந்தும் கலையழகு கொண்டவளே

எத்திக்கும் என் நா மணக்கும் மலர்தமிழே
புத்திக்குள் புகுந்தென்னை கவிப்பூவுலகில்
கால்பதிக்க வைத்த வளர்தமிழே

சித்திர செவ்விதழ்கள் பல
சித்தரிக்கும் என் தமிழே
கத்தரி வெயிலிலும் எமை
உறையச் செய்யும் பனித்தமிழே

Continue reading “தமிழா?அமிழ்தா? – கவிதை”

உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்

உழவு மாடுகள்

உழவு மாடுகள் விவசாயிகளின் செல்வம் ஆகும். மாடு என்றால் பொதுவில் செல்வம் என்று பொருள். கம்பன் மாட்டின் சிறப்பை சொல்லும்போது,

"வானத்தில் மேகங்கள் எழுந்து குறித்த காலத்தில் மழை பெய்தாலும் உலகினருக்கு செழிப்பு உண்டாவது மாடுகளினாலேதான். 

வேதம் படித்தவர்களால் வெய்யப்படும் வேள்விகள் சிறப்புப் பெறுவதுவும் மாடுகளால்தான். 

படைகள் கொண்டு போர் புரியும் மன்னர்களின் மதங்கொண்ட யானைகள் வலிமைப் பெறுவதும் மாடுகளால்தான்" என்று வேளாளர்களின் உழவு மாடுகளைச் சிறப்பிக்கின்றார்.
Continue reading “உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்”