இயற்கையை நேசிப்போம்! இன்பமாய் சுவாசிப்போம்!!

இயற்கையை நேசிப்போம்

இயற்கை அன்னை நமக்கு பலவிதமான அன்பளிப்புகளைக் கொடுத்திருக்கிறாள்.

அந்த அன்னை தந்த பொருளை நாம் அன்பாக நேசிக்கிறோமா? பண்போடு பாதுகாக்கிறோமா? என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

உலகிலேயே விலை மதிக்க முடியாத ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதுக்குப் பெயர்தான் உயிர்.

இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். பிறப்பு, வாழ்வு, முடிவு அனைத்தும் நாம் வாழும் நிலத்தில் நடப்பதை நாம் அறிவோம்.

Continue reading “இயற்கையை நேசிப்போம்! இன்பமாய் சுவாசிப்போம்!!”

பறக்காத பறவைகள்

பறக்காத பறவைகள்

பறக்காத பறவைகள் என்ற தலைப்பு உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். பறவைகளின் தனித்தன்மையே பறப்பதுதான். ஆனால் பறக்காத பறவைகளும் உலகில் இருக்கின்றன.

பறக்காத பறவைகள் ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிகள், தென் துருவப்பகுதி, தென் அமெரிக்காவின் பாம்பஸ் புல்வெளி, ஆஸ்திரேலியாவின் காடுகள் மற்றும் நியூசிலாந்து தீவுகளில் காணப்படுகின்றன.

பொதுவாக பறவைகள் வேட்டையாடும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உணவினைத் தேடவும், தங்கள் சந்ததிகளைப் பாதுகாப்பாக வளர்க்கவும் பறக்கின்றன.

Continue reading “பறக்காத பறவைகள்”

முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்

தமிழக முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்!

திக்கற்று நிற்கும் ஆசிரியர்களைக் காப்பாற்றுங்கள்!

பரிதவிப்பில் இருக்கிறார்கள்

தனியார் பள்ளி ஆசிரியர்கள்

Continue reading “முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்”

தடுப்பூசிகளின் துணைகொண்டு

தடுப்பூசிகளின் துணைகொண்டு

துணிவுடன் கொரோனாவை எதிர்கொள்வோம்!

அனுதினமும் அதிகரிக்கும்

அகால மரணங்களுக்கு முடிவில்லை!

ஆர்ப்பரித்தாடும் கொரோனாவின்

அதிபயங்கர இரண்டாம் அலை!

Continue reading “தடுப்பூசிகளின் துணைகொண்டு”

தவப்புதல்வன் – சிறுகதை

தவப்புதல்வன்

தவப்புதல்வன் ஓர் அருமையான சிறுகதை.

காவிரிப் பாலம் தான் திருச்சியின் பீச்.

காவிரி கரை புரண்டு ஓடாவிட்டாலும், பாலச்சுவரைப் பிடித்துக் கொண்டு, மாலை நேர இதமான காற்றின் சுகத்தை அனுபவித்தவாறே மணிக்கணக்கில் காவிரியைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விடுவது, மக்களின் பொழுது போக்கு அம்சமாகி விட்டது.

பல்வேறு சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள், செயல்கள் மூலம் ஏற்படும் ஒருவிதமான இறுக்கத்தை மாலை வேளையில் காவிரித் தாயின் திருவடிகளில் இறக்கி வைத்து விட்டுச் செல்வதில் மக்களுக்கு ஓர் ஆத்ம திருப்தி.

Continue reading “தவப்புதல்வன் – சிறுகதை”