சேமியா பால் ஐஸ் செய்வது எப்படி?

சேமியா பால் ஐஸ்

சேமியா பால் ஐஸ் கோடை காலத்துக்கு ஏற்ற உணவு ஆகும். இதனை வீட்டில் செய்து அசத்தலாம். வீட்டில் செய்யும்போது இதனுடைய சுவை கூடுவதோடு, தூய்மையான பொருட்களைப் பயன்படுத்துவதால் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.

சிறுவயதில் சேமியா ஐஸை தெருவில் விற்க வரும் ஐஸ்காரரிடம் வாங்கி உண்டுள்ளேன். இப்பொழுது சேமியா ஐஸை, நினைத்தவுடன் வீட்டிலேயே நாமே தயார் செய்து உண்ணும் பொழுது இன்னும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

Continue reading “சேமியா பால் ஐஸ் செய்வது எப்படி?”

குங்கிலியக்கலய நாயனார் – இறைவனை நேராக்கியவர்

குங்கிலியக்கலய நாயனார்

குங்கிலியக்கலய நாயனார் சாய்ந்திருந்த சிவலிங்கத் திருமேனியை தன்னுடைய அன்பு என்னும் பாசக்கயிற்றால் நேராக்கிய வேதியர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர்.

சிவனிடம் இவர் கொண்டிருந்த மாறாத பேரன்பினை அறிந்து கொள்ள இவருடைய வரலாற்றைத் தொடர்ந்து படியுங்கள்.

குங்கிலியக்கலய நாயனார் சோழ நாட்டில் அமைந்திருந்த திருக்கடவூர் என்னும் ஊரில் பிறந்தார். திருக்கடவூர் இன்றைக்கு திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Continue reading “குங்கிலியக்கலய நாயனார் – இறைவனை நேராக்கியவர்”

தேர்தல் பணி பற்றித் தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் தேர்தல் பணியை

தேர்தல் பணி ஒரு சவாலான பணி. சில அடிப்படைப் பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டால் தேர்தல் பணியை எளிதாக்கலாம். கட்டுரை அவற்றை விளக்குகிறது.

அன்பார்ந்த இனிது மின்னிதழ் வாசகர்களுக்கு வணக்கம்.

தேர்தலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பது மக்களாட்சி முறையில் மிக முக்கியமான பொறுப்பு. நமது அரசு ஊழியர்கள் மிகச் சிறப்பாகத் தேர்தலை நடத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு மக்களின் சார்பாக வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையில் ஓர் ஆசிரியராகவும், வாசகனாகவும், என் கருத்துக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Continue reading “தேர்தல் பணி பற்றித் தெரிந்து கொள்வோம்”

நீருடன் ஓர் உரையாடல் 6 – நீரின் உறைதிறன்

நீரின் உறைதிறன்

ஒரு ஆய்வகத்தினுள் நுழைந்து சென்று கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு விஸ்தாரமான ஆய்வக அறை இருந்தது. அங்கிருந்த ஒரு ஆராய்ச்சியாளர் என்னை இன்முகத்துடன் வரவேற்றார்.

நானும் இன்முகத்துடன் அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதனை அடுத்து ஒரு மேசையில் இருந்த கருவியை அவர் எனக்கு காண்பித்தார். ஆர்வமுடன் அதனை நான் பார்த்தேன். அந்தக் கருவி ஏதோ ஒரு பெட்டி மாதிரித்தான் இருந்தது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 6 – நீரின் உறைதிறன்”

அறப்பணியாளர்களின் அவலம்

அறப்பணியாளர்களின் அவலம்

பாவம் செய்து விட்டோமா

ஆசிரியராக உயர்ந்து?

தணியாத கொரானா தாக்கத்தால்

தனியாகத் தவிக்கிறோம் தாகத்தோடு

தனியார்பள்ளி ஆசிரியர்கள்

Continue reading “அறப்பணியாளர்களின் அவலம்”