போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் என்று தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் இருபதாவது பாடல் ஆகும்.
திருவெம்பாவை பாடல்கள் உலக உயிர்களுக்கு வீடுபேற்றினை வழங்கும் சிவபெருமான் மீது, அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகரால் பாடப் பெற்றது.
கி.பி.9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற திருவெம்பாவை பாடல்கள் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது, பாடப்படும் சிறப்பினைக் கொண்டுள்ளன.