அம்மா அப்பா அ சொல்லே
ஆட்டுக் குட்டி ஆ சொல்லே
இணைய இதழ்
குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் சிவகணங்களுள் ஒருவரான குண்டோதரன் என்னும் பூதத்திற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின்போது மீனாட்சியம்மமை உணவளித்ததைப் பற்றி கூறுகிறது.
தன்னுடைய செல்வ செருக்கினால் மீனாட்சிக்கு உண்டான கர்வத்தினை அடக்க சுந்தரேஸ்வரர் இத்திருவிளையாடலை நிகழ்த்தியதாகவும் கருதப்படுகிறது. Continue reading “குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்”
ஒருமுறை ஒரு மனிதனின் வாயில் இருக்கும் பற்களுக்கு நாம்தான் எண்ணிக்கையில் நிறைய இருக்கின்றோம், அதனால் நம்மிடம் நிறைய பலம் உள்ளது என்ற ஒரு கர்வம் வந்து விட்டது.
பற்கள், நாக்கைப் பார்த்து, “நாங்கள் 32 பேரும் சேர்ந்து ஒரு தடவை உன்னை இறுக்கி அழுத்தினால் நீ காலியாகிவிடுவாய் என்று கேலி செய்து சிரித்தன. Continue reading “எண்ணிக்கை மட்டும் பலமன்று”
கரும்பு என்றாலே இனிக்கும். கரும்பினை நினைத்தவுடன் அதனுடைய இனிப்பு சுவை, வாயில் நீர் ஊற வைக்கும்.
வெயில் காலத்தில் நம்நாட்டில் கரும்புச்சாறு அருந்தாதவர் யார்? என்ற கேள்விக்கு ஒருவரும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
கரும்புச்சாறு என்பது கோடைக்காலத்தில் இயற்கை நமக்கு அளித்த அற்புதமான பானம் ஆகும். Continue reading “இரும்பு உடலைத் தரும் கரும்பு”
கார தேங்காய் பால் வித்தியானமான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.
பொதுவாக தேங்காய் பால் இனிப்பாக இருக்கும். நாம் ஆப்பம், தோசை போன்றவற்றிற்கு தேங்காய் பாலுடன் மண்டை வெல்லம் அல்லது சர்க்கரை (சீனி) சேர்த்து இனிப்பாக பயன்படுத்துவோம்.
சர்க்கரை சத்து உள்ளவர்கள் இந்த இனிப்பு தேங்காய் பாலை பயன்படுத்த யோசிப்பர். ஆனால் கார தேங்காய் பால் சர்க்கரை நோயாளிகளும் உண்ணக் கூடியது.
Continue reading “கார தேங்காய் பால் செய்வது எப்படி?”