நல்வேளை முழுத் தாவரமும் காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இலை, சளி, நீர்கோவை ஆகியவற்றைப் போக்கும். இலைச் சாறு தாது பலம் தரும். பூ கோழை அகற்றும். பசி உண்டாக்கும். தாவரப் பட்டை, தோலில் எரிச்சலூட்டும். காயத்தை உண்டாக்கும்.
தான்றிக்காய் – மருத்துவ பயன்கள்
தான்றிக்காய் பழங்கள் துவர்ப்புச் சுவையை அதிகமாக்கும்; கோழையகற்றும்; மலமிளக்கும்; உடலைப் பலப்படுத்தும். வயிற்றுக் கோளாறுகளுக்கும், அஜீரணத்திற்கும் மிகவும் ஏற்றவை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்! – 2016
இனிது! இனிது!
2016 இனிது!
கதிரவன்
நீலக்கடலிலிருந்து தோன்றும் காலைக் கதிரவனே
மலையின் மேலே எழும் ஞாயிறே
இருளைப் போக்கி இன்பம் நல்கும் எழில் முதல்வனே
பொங்கும் ஒளியைப் புவியெங்கும் பரப்பி
உயிரினங்களையும் பயிரினங்களையும் காக்கும் ஒப்பில்லாத் தலைவனே
நின்னைப் பார்த்த பொருளெல்லாம்
ஒளி பெறுகின்றன உயிர்ப்பை அடைகின்றன
உன் வரவால் உலகம் விழிக்கின்றது இயங்குகின்றது
ஞாயிறுத் தெய்வமே நின்னை புகழ்கின்றோம்!
போற்றுகின்றோம்! வணங்குகின்றோம்!