உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்

உழவு மாடுகள்

உழவு மாடுகள் விவசாயிகளின் செல்வம் ஆகும். மாடு என்றால் பொதுவில் செல்வம் என்று பொருள். கம்பன் மாட்டின் சிறப்பை சொல்லும்போது,

"வானத்தில் மேகங்கள் எழுந்து குறித்த காலத்தில் மழை பெய்தாலும் உலகினருக்கு செழிப்பு உண்டாவது மாடுகளினாலேதான். 

வேதம் படித்தவர்களால் வெய்யப்படும் வேள்விகள் சிறப்புப் பெறுவதுவும் மாடுகளால்தான். 

படைகள் கொண்டு போர் புரியும் மன்னர்களின் மதங்கொண்ட யானைகள் வலிமைப் பெறுவதும் மாடுகளால்தான்" என்று வேளாளர்களின் உழவு மாடுகளைச் சிறப்பிக்கின்றார்.
Continue reading “உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்”

நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்று கலியன் சவுரி ராஜப் பெருமாளை அழைக்கிறார்.

கலியன் என்பது திருமங்கை ஆழ்வாரின் பெயராகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணபுர‌த்தில் உள்ள சவுரி ராஜப் பெருமாளை நீயும் கற்கலாம் தமிழை என்று அழைக்கிறார்.

Continue reading “நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்”

மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்

மகாபாரதப் போருக்கு யார் காரணம்

மகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், மகாபாரதம் படித்த அல்லது கேட்ட அல்லது பார்த்த‌ அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நமது பதிலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார். அதற்காக மகாபாரதத்தில் சகாதேவனுக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலை முன்வைக்கிறார்.

Continue reading “மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்”

தெய்வத் தமிழ்

தெய்வத் தமிழ்

தொன்மை வாய்ந்த நம் பாரத நாட்டில் சிறந்த கலாசாரத்தோடும் பண்பாட்டுடனும், வாழ்வியல் முறையில் தனித்துவம் பெற்றதாகவும், மற்றவர்க்கு எடுத்துக்காட்டாகவும் தமிழ் பேசும் நல்லுலகம் விளங்கியது.

சமயக் கருத்துகளும் தத்துவ விளக்கங்களும் சிறந்து விளங்கின. ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் அனைவரும் இருந்தது நம் பகுதியில்தான். பதினெண் சித்தர்கள் இருந்ததும் இங்குதான்.

சங்கரர், இராமாநுஜர் மற்றும் மத்வர் ஆகிய மூன்று முதன்மையான தத்துவப் பெரியோர்கள் தோன்றியதும் இங்குத்தான். 108 வைணவத் திவ்ய தேசங்களில் பெரும்பாலான திருத்தலங்கள் தென்னகத்தில்தான் இருக்கின்றன.

சைவத் திருத்தலங்களில் பெரும்பான்மையான திருத்தலங்கள் இங்குதான் உள்ளன. முருகனின் ஆறுபடைவீடுகளும் இங்குதான் உள்ளன. திகம்பர சமணக் கோயில்களும் அநேகம் இங்கு உள்ளன.

Continue reading “தெய்வத் தமிழ்”

விவசாயி எதை இழந்தான்?

உரிமையை இழந்த விவசாயி

விவசாயி எப்படி இருந்தான்; ஏன் இன்று இழிநிலை அடைந்தான்? என்பதைச் சுருக்கமாகச் சொல்லும் கட்டுரை. படித்துப் பாருங்கள்; படித்ததை யோசித்துப் பாருங்கள்.

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடி மன்னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. (ஏரெழுபது.கம்பர்)

பாடலின் பொருள்

எல்லோரும் வணங்கும் குலத்தில் பிறந்தால் என்ன?

அரச குலத்தில் குலத்தில் பிறந்தால் என்ன?

வணிகர் அல்லது செல்வர் குலத்தில் பிறந்தால் என்ன?

இவர்களை எல்லாம் விட உழவர்களே மேலானவர்கள்.

ஏனென்றால் அவர்கள்தான் மனிதர்கள் உயிரோடு வாழ உணவு படைக்கின்றார்கள்.

இதுதான் விவசாயியின் அன்றைய நிலை.

இன்று இருப்பதோ அவல நிலை.

Continue reading “விவசாயி எதை இழந்தான்?”