நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் – சிறுகதை

நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள்

மார்க்கெட்டில் நுழைந்த மாணிக்கவேலு ஏதேச்சையாய் திரும்பியபோது தேங்காய் வாங்கிக் கொண்டிருந்த ராமநாதனைப் பார்த்துவிட்டார்.

வழக்கமாய் காணப்படும் உற்சாகம் அவர் முகத்தில் இல்லை. வாட்டமுடன் அவர் காணப்படுவதைக் கண்டு குழம்பினார் மாணிக்கவேலு.

நேற்று அவர் பெண்ணைப் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் ஏடாகூடமாக ஏதாவது சொல்லிவிட்டுப் போயிருப்பார்களோ?

Continue reading “நரகத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் – சிறுகதை”

அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை

அன்பிற்கு பஞ்சம்

என்னுடைய மாமனாரின் முதல் நினைவு நாளுக்காக, மனைவி, குழந்தைகள் என குடும்பம் சகிதமாக விருதுநகரில் இருந்த மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.

என்னுடைய சொந்த ஊரும் விருதுநகர் தான். நான் பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பினை முடித்ததும் இந்த ஊரில்தான்.

கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்றவன், அங்கேயே வேலையும் கிடைக்க, அப்பாவின் டிரேடிங்கையும் சென்னைக்கு மாற்றச் சொல்லி அம்மா, அப்பா மற்றும் பாட்டியுடன் சென்னையிலேயே செட்டிலாகி விட்டேன்.

Continue reading “அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை”

அடுத்த கதை – சிறுகதை

அடுத்த கதை – சிறுகதை

முகிலனுக்கு வெகு நாட்களாகவே உள்ளூர‌ ஓர் குறை. எல்லோரும் அவன் எழுதும் கதைகளை ரசித்துப் படித்து பாராட்டும் போது ஸ்வர்ணா மட்டும் ஏன் எவ்வித அபிப்ராயமும் கூறுவதில்லை?

ஸ்வர்ணா வேறு யாருமல்ல; அவனுடைய மனைவிதான்.

அலுவலக நண்பர்கள் அனைவருமே அவனது கதைகளைப் படித்து விட்டு, அவரவர் அபிப்ராயங்களைக் கூறி வந்தார்கள்.

ஆரம்ப காலத்தில் அவனே ஒவ்வொருவரிடமும் கதைகள் பிரசுரமான பத்திரிக்கைகளை எடுத்துச் சென்று காண்பித்தது போய், இப்போதெல்லாம் அவர்களே வலிய இவனிடம் வந்து கங்கிராட்ஸ், சூப்பர்ப், வொண்டர்ஃபுல், மார்வலஸ் என அவனது கதைகளை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

Continue reading “அடுத்த கதை – சிறுகதை”

House Wife குறும்படம் விமர்சனம்

House Wife குறும்படம் விமர்சனம்

House Wife குறும்படம், நமது நாட்டில் பெண் பெறவேண்டிய சுதந்திரம் குறித்து நெற்றியில் அடித்தாற் போல் கூறுகிறது.

பழமைவாதம், கௌரவம், பெண் அடிமை, உரிமைக்கான போராட்டம் எனக் கதை பெரும் வளையத்திற்குள் நீண்ட அம்சங்களை அலசி ஆராய்கிறது.

காலத்தின் இடைவெளி, இரு முனைகளான மாமியார் மருமகளை வேறு வேறாக உருவாக்குவதைக் கதை அழுத்தம் திருத்தமாக கூறுகிறது.

ஒரு எதார்த்தமான வாழ்க்கை முறை அப்படியே பிசகாமல் இக்குறும்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

Continue reading “House Wife குறும்படம் விமர்சனம்”

பிறைகள் – சிறுகதை

பிறைகள் – சிறுகதை

சென்னை சென்று மகள் காவேரி வீட்டில் ஒரு வாரம் தங்கி விட்டு திருச்சி திரும்பி நான்கு நாட்கள் ஆகியும், அம்மா மகேஸ்வரியின் மனம் ஒருவித தத்தளிப்பிலேயே மூழ்கியிருந்தது.

இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டுப் போகும்படி காவேரி எவ்வளவோ வற்புறுத்தியும், கௌரவம் குறுக்கே நின்று தடுத்ததால் கிளம்பி வந்துவிட்டாள்.

என்னதான் பெற்ற மகள் வீடு என்றாலும், மாப்பிள்ளை வீட்டில் எவ்வளவு நாட்கள் தங்குவது?

மாப்பிள்ளை மறுப்பு ஏதும் கூறப் போவதில்லை. இருப்பினும் ஒருவித தர்மசங்கடம் உள்ளத்தை உறுத்தியதால், மகளின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை.

Continue reading “பிறைகள் – சிறுகதை”