அழகுக்கு அழகு – சிறுகதை

அழகுக்கு அழகு

உள்ளம் முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பவானி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

சுவர்க் கடிகாரத்தின் ஒலி மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

‘எப்போது சாப்பிட்டு முடிப்பார்? பேச்சைத் துவங்கலாம்’ என பவானி பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள். மகன்கள் இருவரும் வெளியே சென்றிருந்தனர்.

பெரிய பெண் சாந்தி பூஜையறையில் மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜைக்காகத் தயார்படுத்திக் கொண்டிருக்க, சாந்தியின் தங்கை தீபிகா டி.வி. முன் அமர்ந்து அழகுக் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணின் அலங்காரத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

Continue reading “அழகுக்கு அழகு – சிறுகதை”

வீணையடி நீ எனக்கு – சிறுகதை

வீணையடி நீ எனக்கு

நர்மதாவை நாராயணனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எதையுமே தேர்வு செய்யும் விஷயத்தில் நாராயணனை மிஞ்ச எவருமில்லை என்னும் கூற்று, அவனைப் பொறுத்த மட்டில் இப்போதெல்லாம் பேத்தலாகவே பட்டது.

நண்பர்களும் உறவினர்களும் அவனைப் பற்றி வானளாவப் புகழ்ந்து தள்ளுகிற போதெல்லாம் ரொம்பப் பெருமையாகத்தான் இருந்தது. எல்லாம் திருமணமாகும் வரைதான்.

அலுவலக நண்பர்களின் பிரிவுபசார விழாவாகட்டும், உறவினர்களின் திருமணமாகட்டும் பரிசுகள் வாங்குவதிலிருந்து புடவை, நகை, பாத்திரங்கள் எதுவாயிருப்பினும் நாராயணன் இல்லாமல் எதுவும் நடக்காது.

அவ்வளவு நேர்த்தியாக, பாங்காக, தரமாகத் தேர்வு செய்வான். அவன் தேர்வு செய்துவிட்டால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடலாம்.

Continue reading “வீணையடி நீ எனக்கு – சிறுகதை”

மனம் கொத்திகள் – சிறுகதை

இண்டிகோ கார் ஒன்று தெருவில் வந்து நின்றது.

அதிலிருந்து குமரன் மணக்கோலத்தில் இறங்கி நின்றான். அவனை தொடர்ந்து இஷாவும் மணக்கோலத்தில் இறங்கினாள்.

அவர்களைப் பார்த்த அந்த தெருவுக்காரப் பெண் முப்பிடாதி, சங்கரனின் வீட்டுக்குள் ஓடினாள்.

தெருவில் நடப்பது எதுவும் தெரியாமல் வீட்டில் அமைதியாக  சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சங்கரன்.

முப்பிடாதி வேகமாக வருவதை பார்த்தவர் “முப்பிடாதி, என்ன அரக்க பறக்க ஓடி வர்ற? என்ன விஷயம்?”

Continue reading “மனம் கொத்திகள் – சிறுகதை”

செங்கல் ‍- சிறுகதை

செங்கல் ‍- சிறுகதை

ஐந்தாயிரம் சதுரடியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு தளத்தில் நான்கு மணி நேரமாக கரண்ட் இல்லாமல் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.

நூற்றி ஐம்பதிற்குக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேப்பரால் விசிறிக் கொண்டும், திறக்க முடியாத கண்ணாடி ஜன்னல்களை திறக்க முயற்சித்தும் புழுங்கி தவிக்கிறார்கள்.

ஐம்பது கோடி ரூபாய் ப்ராஜெக்ட். ஏற்கனவே இந்த ப்ராஜெக்ட் தாமதமாகி விட்டது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.

மும்பையிலிருக்கும் கம்பெனிச் சேர்மன் நிமிடத்திற்கு ஒருமுறை போன் செய்கிறார்.

Continue reading “செங்கல் ‍- சிறுகதை”

புதுமைப் பெண் – சிறுகதை

புதுமைப் பெண்

நரேந்திரனின் முன் ஜாக்கிரதை உணர்வு விவரிக்க இயலாதது.

பேனா இரவல் கேட்டால் மூடியைத் தன்னிடம் வைத்துக்கொண்டு கொடுப்பதும், கோவிலில் காலணிகளை வெவ்வேறு இடங்களில் பிரித்துப்போட்டு பாதுகாப்பதும், வாட்ச் எவ்வித சேதமும் ஆகாமலிருக்க இடது மணிக்கட்டின் உட்புறமாகக் கட்டுவதுமாக தனது உடைமைகளை வெகு சிரத்தையுடன் பாதுகாத்துக் கொள்வான்.

அரசாங்க உத்தியோகத்தில் கை நிறைய சம்பளம். வங்கிகளில் கணிசமான சேமிப்பு. சொந்த வீடு, கார் என நல்ல வசதியுடன் கஷ்டமில்லாத வாழ்க்கை.

Continue reading “புதுமைப் பெண் – சிறுகதை”