உள்ளம் முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பவானி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
சுவர்க் கடிகாரத்தின் ஒலி மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.
‘எப்போது சாப்பிட்டு முடிப்பார்? பேச்சைத் துவங்கலாம்’ என பவானி பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள். மகன்கள் இருவரும் வெளியே சென்றிருந்தனர்.
பெரிய பெண் சாந்தி பூஜையறையில் மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜைக்காகத் தயார்படுத்திக் கொண்டிருக்க, சாந்தியின் தங்கை தீபிகா டி.வி. முன் அமர்ந்து அழகுக் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணின் அலங்காரத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
Continue reading “அழகுக்கு அழகு – சிறுகதை”