பஞ்சாயத்து தலைவர் தங்கராஜ் வீட்டுக்கு வந்து “ஐயா!” என்று குரல் எழுப்பி அடக்கமாக நின்றார் ராமசாமி.
Continue reading “புண்ணியம்!”இற்றைத் தமிழ்ச் சங்கங்கள்!
தமிழே அமுதே தாயே உயிரே
தலையுங் கடையும் நீயென்பார் – இமை
சிமிழ்க்கும் நொடியுஞ் சிந்தை இன்றி
வாயும் வயிறும் வேறென்பார்
இன்றைய சமூக நிலை!
சூழ்நிலை, அரசியல், உழைப்பின்மை, பேராசை மற்றும் போலி நாகரீகம் இவைகளால் நமது சிறந்த வாழ்க்கை முறை சிதறடிக்கப்பட்டது.
இலவசமாகக் கொடுக்க வேண்டிய கல்வியையும் மருத்துவத்தையும் ஆட்சியாளர்கள் வியாபாரமாக ஆக்கினர்.
Continue reading “இன்றைய சமூக நிலை!”சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!
சேர்மக்கனி அவர்கள் பூலாஊரணி என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் தலைமைப் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
தன்னுடைய நலனுக்காக இல்லாமல் பிறருடைய நலனுக்காக உழைப்பவர்கள் இருப்பதனாலேதான், இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்தக் கருத்திற்கு முற்றிலும் பொருத்தமாக, பொது வாழ்வில் மற்றவர்களுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், த.சேர்மக்கனி அவர்கள்.
சேர்மக்கனி எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. அவர் எந்த அரசு பதவியையும் வகித்தவர் அல்ல.
நேரடி அரசியலில் ஈடுபடாமலும் பொது வாழ்வில் ஈடுபடலாம் என எனக்கு வழிகாட்டியவர் அவர்தான்.
அவருடைய வாழ்வும் செய்தியும் சொல்லும் சுருக்கமான கட்டுரை இது.
Continue reading “சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!”அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
உண்ணும் உணவை வணிகமாக்கி
உழவைத் தொழிலாய் மாற்றுதற்குப்
பண்ணும் செயலே செறிவூட்டம்
பன்னாட் டரசின் சதித்திட்டம்
எண்ணும் எழுத்தும் எப்பொழுதும்
ஏமாற் றுதற்கே துடிதுடிக்கும்
மண்ணும் உயிரும் இவர்களுக்கு
மாபெரு சந்தை தவிர வேறிலையே!