ஏரி ‍- பண்டைய முறையும் அமைப்பும்

ஏரி
ஏரி நீர் சேமிப்பின் முக்கிய அங்கம். நம் முன்னோர்கள் காலத்தில் ஏரிகள் எப்படி இருந்தன என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. அதற்காகவே இந்தக் கட்டுரை.

மனித நாகரீகம் ஆரம்பித்த காலம் தொட்டு நீர்நிலைகள் மற்றும் வேளாண்மை என்பன இன்றியமையாதவையாக இருந்துள்ளன.

பெரும்பாலும் ஆற்றுப் படுகைகளில் பண்டைய நாகரிகம் பரந்திருக்கக் காண்கின்றோம். மனிதர்கள் முதலில் ஆற்றை மட்டும் சார்ந்து இருந்துள்ளனர். பிறகு நீர்நிலைகள், குட்டைகள், ஏரிகள் உருவாக்கப்பட்டு அதன் வழியே பாசனம் செய்யப்பட்டது. கால்வாய்கள் மூலம் பாசனம் வந்தது, குட்டைகளில் இருந்து ஏற்றம் மூலம் பாசனம் செய்யப்பட்டது.

Continue reading “ஏரி ‍- பண்டைய முறையும் அமைப்பும்”

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் என்ற‌ நூல் திரு.சி. இராமமூர்த்தி இராமாநுஜதாசன் அவர்களால் மே மாதம்-2021 ல் வெளியிடப்பட்ட அற்புதமான நூல் ஆகும்.

அற்புதமான ஆழ்வாரான நம்மாழ்வாரின் இலக்கிய நயங்களையும், வைணவச் சமயம் சார்ந்த இறையாண்மைக் கருத்துக்களையும் பன்னூல் புலமையோடு ஒப்பிட்டும், உவமித்தும் எழுதப்பட்டது இந்நூல்.

ஆன்மீகம் ஒரு மாபெரும் பிரமாண்டம். அதை இன்னும் யாரும் முழுதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் நுழைவதற்கான பல வழிகளில் இந்த நூலும் ஒன்று எனலாம்.

Continue reading “நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை”