இத்தனைக்குப் பிறகும் என்னவோ தெரியவில்லை
என் மனம் உன்னைத் தான் தேடிக் கொண்டிருக்கிறது
ஆனால் நான் எந்தக் காரணத்தைச் சொன்னாலும்
அதனை ஏற்றுக் கொள்ளவும் மறுத்திடுவாய்
என்று எனக்குத் தெரியும்
மனதின் உருக்கம்!
எல்லா மனிதர்களும் எந்த நேரத்திலும்
உண்மையை வெளிப்படுத்தவும் பேசவும் மாட்டார்கள்
அப்படிப் பேச எப்போதும் தயங்குவார்கள்
அப்படி ஒருபோதும் பேச மாட்டார்கள்
மனதின் ஏக்கம்!
நாம் நன்றாக இருக்கின்றோம் என்று சொல்லலாம்
ஏன் நம் எதிரே வருபவரை
புன்னகை செய்ய வைக்கலாம்
நாமும் சேர்ந்து கூட புன்னகை செய்யலாம்
ஆனால் நம் மனது எதையோ தேடிக் கொண்டிருக்கிறது
யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது
யாரோ ஒருவருடைய கரங்களின்
ஆதரவை தேடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை
மனதின் உளறல்!
என்ன இருந்தாலும்
அன்றைக்கு அப்படி நடந்திருக்கக் கூடாது
ஆனால் என்னவோ தெரியவில்லை நடந்து விட்டது
நானும் அன்று அப்படி பேசி இருக்கக் கூடாது
யோசித்து இருக்க வேண்டும்
என்னவோ தெரியவில்லை அப்படி நடந்து கொண்டேன்
நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 18
அடுத்து வந்த பத்து நாட்களும் ராகவைப் பார்க்காமலேயே நகர்ந்தன. ராகவ் வராமல் போனதற்குக் காரணம் புரியாமல் தவித்துதான் போனாள் இந்து.
‘அவன் அலுவலகம் சென்று விசாரிக்கலாமா?’ என்றுகூட நினைத்தாள்.
Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 18”