அரிக்கும் அமிலத்தில் ஆளேதீய்ந் தாலும்
வரிவாங்கித் தின்பாரடி – கிளியே
வசூலொன்றே கொள்கையடி!
எழுக தமிழினமே! – பேரினப் பாவலன்
மக்களின் மதிப்பை இழந்தவர் இனியும்
மாண்புடன் இருப்பதுவோ?
குக்கலை விரட்டி அடிப்பதை போலக்
கூனரை விரட்டிடவே
முக்கிய அறிஞர் யாவரும் வெளியில்
வருவதும் வேண்டுமன்றோ
மக்கிய மயிரைப் பிடுங்கியே எறிய
மாத்திறம் வேண்டுவதோ?
எரியரிசி – பேரினப் பாவலன்
இருபது கோடி இந்திய மக்கள்
இரவினில் உணவின்றிப் படுக்கும்
அருளிலா நிலையை அழித்தொழித் திழிவை
அகற்றுதற் கரசுகள் முயலும்
திருமகள் உறையும் திருநிலம் ஆகும்
தீமைகள் தீருமென் றிருந்தால்
கருவிய நெஞ்சாற் கழுத்தறு செயலைக்
கருத்துடன் செய்குது பாரீர்
கலாம் எனும் காவிய நாயகன் – பேரினப் பாவலன்
கலாம் நம் நாட்டின் காவிய நாயகன்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள தெருக்கோடி மனிதரும் முயன்றால் தேசத்தின் தலைமகனாக ஆகலாம் என்ற வரலாற்று வாழ்க்கை சித்திரம் தான் ஐயா அப்துல் கலாம் அவர்கள்.
Continue reading “கலாம் எனும் காவிய நாயகன் – பேரினப் பாவலன்”அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
உண்ணும் உணவை வணிகமாக்கி
உழவைத் தொழிலாய் மாற்றுதற்குப்
பண்ணும் செயலே செறிவூட்டம்
பன்னாட் டரசின் சதித்திட்டம்
எண்ணும் எழுத்தும் எப்பொழுதும்
ஏமாற் றுதற்கே துடிதுடிக்கும்
மண்ணும் உயிரும் இவர்களுக்கு
மாபெரு சந்தை தவிர வேறிலையே!