கண்முன்னே விரும்பியவைக் கிடைக்கா விட்டால்
கனவெல்லாம் தூளாகிக் காற்றாய் ஆனால்
உண்ணற்குப் பொருளின்றிப் பசியில் வாடி
உலகத்தில் உறவின்றி உலர்ந்து போனால்
தண்ணீரே இல்லாத வறுமை வந்து
தான்பிறர்கை எதிர்பார்த்தே மாந்து போனால்
கண்ணீரே கவலகற்றும் மருந்தாம் என்றும்
கரைந்தோடும் உப்பன்றோ விருந்தாம் இன்றும்
புரட்சிப் பெண்!
தேனென்றும் மானென்றும் திங்கள் என்றும்
தேவதையும் திருமகளும் நீர்தாம் என்றும்
வானின்று பொழிகின்ற அமிழ்தம் என்றும்
வளப்படுத்தும் ஆறெல்லாம் பெண்தாம் என்றும்
ஆனென்றும் அழியாத ஆற்றல் என்றும்
அழகுகலை இலக்கியங்கள் தாய்மை என்றும்
மீனென்றும் நிலமென்றும் பைம்பொன் என்றும்
மிகவுயர்த்த மருளடைந்தாய் பேதைப் பெண்ணே!
இற்றைத் தமிழ்ச் சங்கங்கள்!
தமிழே அமுதே தாயே உயிரே
தலையுங் கடையும் நீயென்பார் – இமை
சிமிழ்க்கும் நொடியுஞ் சிந்தை இன்றி
வாயும் வயிறும் வேறென்பார்
ஆள்க நீ தமிழ்மகளே!
எழிலிடை எழுகதிரே எருதுகள் உழுநிலமே
பொழிலிடை எழுமலரே புதுப்புனல் தருநதியே
வழியிடை வருநிலவே வளர்தரு நிலத்திணையே
கழிமடம் தமிழ்நிலத்தில் கழிந்ததென் றறைகுகவே
நோக்குந் திசையெல்லாம்…
தற்செயலால் தனதுழைப்பால் மாந்தன் தன்னைத்
தகவமைத்துக் கொண்டானோ என்னும் வண்ணம்
சொற்செயலும் சுகமாக வாழும் போக்கும்
சுரண்டுவதே உற்பத்தி என்னும் நோக்கும்
Continue reading “நோக்குந் திசையெல்லாம்…”