“ஒரு விற்பனைப் பிரதிநிதி என்றால் அருமையாக டிரஸ் பண்ணவும், அட்டகாசமாக பேசத் தெரிந்தால் மட்டும் போதாது. ‘கில்லர் இன்ஸ்டிங்க்ட்’ (killer instinct) என்னும் ‘செய்து முடி அல்லது செத்து மடி‘ என்ற நியதிப்படி, ஒரு வியாபார ஒப்பந்தத்தை முடித்தால் மட்டும் போதாது; டி.டி அல்லது காஷ் வாங்க வேண்டும் தாமதிக்காமல்!” என்று டெலிபோனில் சென்னையிலிருந்து மானேஜர் சிவகுருவின் ஆங்கில புத்திமதி குண்டுகள் திருப்பூரில் இருந்த விஜய்யின் இதயத்தை துளைத்தன.
Continue reading “வல்லவனுக்கு வல்லவன்!”இறகா? சிறகா?
இறகா? சிறகா?
எதுவாய் இருப்பினும் உயிர்ப்புடன்
இருந்தால் தானே சிறப்பு!
Continue reading “இறகா? சிறகா?”கவலை கொல்லும் மருந்து!
கண்முன்னே விரும்பியவைக் கிடைக்கா விட்டால்
கனவெல்லாம் தூளாகிக் காற்றாய் ஆனால்
உண்ணற்குப் பொருளின்றிப் பசியில் வாடி
உலகத்தில் உறவின்றி உலர்ந்து போனால்
தண்ணீரே இல்லாத வறுமை வந்து
தான்பிறர்கை எதிர்பார்த்தே மாந்து போனால்
கண்ணீரே கவலகற்றும் மருந்தாம் என்றும்
கரைந்தோடும் உப்பன்றோ விருந்தாம் இன்றும்
வாழ்க்கைத் தத்துவங்கள்!
எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும்; வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
Continue reading “வாழ்க்கைத் தத்துவங்கள்!”சுடுகின்ற நெருப்பா? சுகம் தரும் நிலவா?
சுடுகின்ற நெருப்பா ? சுகம் தரும் நிலவா ?
எது தான் நீ எனச் சொல் மகளே!