ஐந்தறிவு பெரியது! ஆறறிவு சிறியது!

அந்த வீட்டு ஓனர் ஒருகூடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஒரு சிட்டையை எழுதிப் போட்டு, பணத்தையும் அதற்குள் வைத்து மணியிடம் கொடுத்து அனுப்பினார்.

Continue reading “ஐந்தறிவு பெரியது! ஆறறிவு சிறியது!”

பிளிறும் களிறு! – கவிஞர் கவியரசன்

பிழைத்துக் கொள்வோமா மாட்டோமாவென
திக்கெட்டும் திடுமென அதிர்ந்தது காடு
பிளிறும் களிறால்!

Continue reading “பிளிறும் களிறு! – கவிஞர் கவியரசன்”

முதலை – ஊர்வன அரசன்

முதலை
முதலை என்றதும் அதனுடைய விரிந்த வாயும் கோரமான பற்களுமே ஞாபகத்திற்கு வரும். ஊர்வன வகையைச் சார்ந்த இவ்விலங்கு அபார தாக்கும் திறனும் வலிமையான கடிக்கும் திறனும் கொண்டுள்ளதால் ஊர்வன அரசன் என்று அழைக்கப்படுகிறது.

முதலையினம் சுமார் 24 கோடி ஆண்டுகளாக இப்பூமியில் வசித்து வருகின்றது. அதாவது டைனோசர்கள் வாழ்ந்த மெசோசோயிக் சகாப்தத்திலிருந்து முதலைகள் இப்புவியில் வாழ்ந்து வருகின்றன.

Continue reading “முதலை – ஊர்வன அரசன்”

யானை என்னும் சூழல் பொறியாளர்

யானை என்னும் சூழல் பொறியாளர்

யானை என்னும் சூழல் பொறியாளர் பற்றி எல்லோரும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் ஒரு செல் உயிரினமான அமீபா முதல் பெரிய உயிரினமான நீலத்திமிங்கலம் வரை எல்லா உயிரிகளும், தங்களின் வாழிடச்சூழலில் தனித்துவமான பங்களிப்பை தருவதோடு, உயிர்வாழ மற்ற உயிரினங்களைச் சார்ந்தே இருக்கின்றன.

Continue reading “யானை என்னும் சூழல் பொறியாளர்”

யானை துதிக்கை அதிசயங்கள் பற்றித் தெரியுமா?

யானை துதிக்கை அதிசயங்கள்

நான் ஒரு சனிக்கிழமை மதியம், நெட் ஜியோ வொய்ல்ட் சானலில், ‘அனிமல் பைட் கிளப்’ என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு யானைக் கூட்டம் நீரோடையில் இறங்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

யானையின் பாதி உயரத்தை மறைக்கும் அளவுக்கு, அந்நீரோடையில் உயரமான புற்கள் நிறைந்து கிடந்தன.

திடீரென யானைக் கூட்டத்தில் இருந்த, குட்டிக்கும் பெரியதுக்கும் இடைப்பட்ட அளவில் இன்னும் தாயை விட்டுப் பிரியாத யானை ஒன்று, வேகமாக தலையை இங்கும் அங்குமாக அசைத்து சப்தம் இட்டது. அந்த யானையின் துதிக்கை வெளியே தெரியவில்லை.

தாய் யானையைத் தவிர கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் லேசாக பின்வாங்கின.

அப்போது யானையின் துதிக்கையை ஏதோ பிடித்து இழுக்கிறது என்று வர்ணனையாளர் கூறினார்.

அந்த யானை கஷ்டப்பட்டு துதிக்கையை வெளியே எடுத்தது. முதலை ஒன்று யானையின் துதிக்கையை கவ்வியபடி வெளியே தெரிந்தது.

Continue reading “யானை துதிக்கை அதிசயங்கள் பற்றித் தெரியுமா?”