வானத்து சுவரினிலே
வண்ணத்தில் ஓவியம் தான்
வரைந்திடத்தான் ஆசை…
கார்மேகக் கரும்புகைதான்
கண்டபடி பரவியதால் …
வண்ணமெல்லாம் கருமையாச்சு…
வானமும் இன்று அழுக்காச்சு …
கதிரவனின் ஓளியதனை
தடுக்கும் திறன் குறைந்ததாலே
கதிர்வீச்சு அதிகமாச்சு
காலநிலை மாறிப்போச்சு…
கரும்புகையை வானுக்கு தருகின்ற
பூமிக்கு அடைமழை தான் பரிசாச்சு…
ஊர் மூழ்கும் நிலையாச்சு…
இனியாவது திருந்திடுமா இவ்வுலகம்?
என்ற கேள்வி இப்ப எழலாச்சு..
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942