உலகத்தில் மிக மலிவான பொருள்
அன்பும் புன்னகையும் தான்.அவைதான் பெறுபவனுக்கும் வழங்குபவனுக்கும்
அதிக இன்பத்தை வழங்கும்.
மரத்தின் பெருமை அதன் உயரத்தால் அல்ல
அது உதிர்க்கும் பழங்களைப் பொறுத்தது.
மலரின் பெருமை அதன் நிறத்தில் அல்ல
அது வெளிப்படுத்தும் மணத்தைப் பொறுத்தது.
அழும்போது தனிமையில் அழு;
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.
உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம்
ஆனால் உன் சிரிப்பு
ஒருவரைக் கூட வேதனைப் படுத்தக்கூடாது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!