உலக நீதி

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடம் தன்னில் போக வேண்டாம்

போகவிட்டு புறஞ் சொல்லித் திரிய வேண்டாம்

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்

மனம் போன போக்கு எல்லாம் போக வேண்டாம்

மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்

தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்

தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்.

 – உலகநாதம் பிள்ளை

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.