கால்ஷீட் காலாவதி ஆகிவிட்டது

பெண்

ஒரு தாளும் பேனாவும்
மட்டும் போதும்
எழுத்துக்களை
உனக்காக செதுக்கி
வைக்கிறேன்.

எனக்குள் இருப்பதை
உனக்குள் கொண்டு வருகிறேன்.
கொஞ்சம் பொறுத்துக்கொள்
ஒரு கவிதையாக.

நீ…
தொலைத்த உன்னை
எப்படி என்னில் கண்டாய்?

சூரியனும்… சந்திரனும்…
சங்கமித்து கொள்கின்றன.
காதலர்களைப் போல…
வெட்கப்படும் போது
அமாவாசை
இரவு.

உன் வரவை
நிலவை
சூரியனைப்
போலவே
நோக்குகின்றேன்.

நான்
நிகழ்காலக் காதலுனுமில்லை
எதிர்காலக் கணவனுமில்லை ஆனாலும்
என்னுள் ஏன்
இத்தனை மாற்றங்கள்?

சில நிமிடத்திற்கு பிறகு
கால்ஷீட் காலாவதி
ஆகிவிட்டது.

நீ
எப்படி இருந்தால்?
என்னை
இப்படி செய்திருக்க முடியும்
பிராந்தையாக.

முனைவர் பாவலன்
சென்னை

 

Comments

“கால்ஷீட் காலாவதி ஆகிவிட்டது” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Dr. Veeramani Ganesan

    இந்த கவிதை படிபவர்களையும் ஏதோ செய்கிறது…

    அபாரம்…

  2. பாரதிசந்திரன்

    வார்த்தைகள் வளையம் இட்டு சுழன்று சுழன்று மனதிற்குள் சிறகடிக்கின்றன காதலின் மௌனப் புன்னகை காற்றில் தவழ்ந்து விளையாடுகிறது உணர்வுகளின் விளையாட்டு கால்பந்தாட்ட மைதானத்தில் அசுரவேகத்தில் சுழன்று அடிக்கிறது

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.