சாரல்

Kutralam

தென்றல் த‌னைச் சுமந்து வரும்

தென் பொதிகை சாரலே

என்ன என்று புகழ்ந்து பாட‌

உன் அருமைக் காதலை

 

குன்றில் இருந்து குதித்து வரும்

குற்றால அருவி யாய்

எங்கு இருந்து நீ வந்தாய்

என் இதயம் மகிழவே

 

சின்ன சின்ன துளியென நீ

சிதறி விழும் பொழுதிலே

என்ன ராகம் சொல்லித் தந்தாய்

இலைகள் தாளம் போடுதே

 

உன்னைத் தழுவி நிற்கும் பொழுது

உயர்ந்த சொர்க்கம் ஆனதே

அன்றும் இன்றும் என்றும் உன்

அணைப்பில் வாழ்வு இனிக்குமே

இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.