மனிதனைப் போல் பல உயிரினங்கள்
அதனைப் போலவே – பல அதுக்களை
உருவாக்கி விடுகின்றன
கொஞ்சம் கூட மூலமற்ற சூனியத்திலிருந்து…
இன்னும் சில
மரங்களைப் போல்
பறவைகளைப் போல்
அதனைப் போலவே அல்லாத
வேறொன்றிலிருந்து – பல அதுக்களை
உருவாக்கி விடுகின்றன
மேலதைப்போல…
உலகம்
சூனியத்திலிருந்துப் பல்கிப் பெருகுகிறது
பித்தாகோரஸின்
எண்ணிமப் பிரம்மத்தின் படி…
அதே நேரம்…
ஏதென்ஸ் நகரில்
சாக்ரடீஸ்
அதிகமாய் படித்தமையால்
பேசத் தெரியவில்லையெனப்
பிறர் அறிவுறுத்தலால் விஷக்கோப்பையை
ருசிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்…

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
ஏதென்ஸ் நகரில் சாக்ரடீஸ் பேசத் தெரியாமல் விஷக்கோப்பையை ஏந்திக் கொண்டிருந்தார். அரிய செய்தி!
ஆழ்ந்த சிந்தனைத் துளிகளின் வெளிப்பாடு.
சிறப்பு ஐயா.
நிதர்சமான வரிகள் சார்.
ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு!
கவிதை மிகவும் ஆழமானதாக உள்ளது.
ஒரு பக்கம் படிக்காத பாமரர்களும் இன்னுமொரு பக்கம் அறிவுஜீவிகளும் நிரம்பியுள்ளனர் என்ற ஆழ்ந்த தத்துவத்தைத் தங்களது கவிதை புலப்படுத்துகிறது.
கவிஞருக்குப் பாராட்டுகள்!
சு.சோமசுந்தரி